முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்" என பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து கூறியுள்ளார்..

தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு தமிழ் மாதமான ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் மிக உகந்த நாளாக கருதப்படுகிறது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் மகனான முருகப்பெருமானுக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த நாளில் ஆடி கிருத்திகை பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தமிழ் மக்களிடையே பிரபலமான ஒன்றாகும்.

கார்த்திகை நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் ஆடி மாதத்தில் வரும் ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு மிகுந்த சிறப்பு உள்ளது. மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை கர்க சங்கராந்தி அன்று தொடங்குகிறது அதாவது ஜூலை 16 இது உத்தராயன காலம் முடிந்த தட்சிண புண்ணிய காலத்தில் தொடக்கத்தை இந்த நாள் குறிக்கிறது.

முருகப்பெருமானின் சிறப்பு நிகழ்வு கந்த புராணத்தின் விரிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து முருகனை ஆறு சுடராக படைத்ததாக கூறப்படுகிறது. சரவணப் பொய்கையில் கார்த்திகை பெண் என்று அழைக்கப்படும் ஆறு கன்னிப்பெண்கள் சுடர் வடிவில் இருந்த குழந்தைகளை வளர்த்தெடுக்கின்றன.

 இந்த ஆறு குழந்தைகளும் பார்வதி தேவியால் இணைக்கப்படுகிறது. தங்களுடைய தன்னலமற்ற சேவைக்கு வெகுமதியாக சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி கார்த்திகை பெண்களை அழியாததாகவர்களாக இருப்பீர்கள் என ஆசீர்வதித்தார்கள். இவர்களை இந்நாளில் வழிபடுவதும் முருகப்பெருமானையே வழிபடுவதாக கூறப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரத்தை போற்றுவதன் மூலம் கார்த்திகை பெருமானையும் போற்றுகிறோம்.

ஆடி கார்த்திகை தினத்தன்று அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பழனி, திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழமுதிர்சோலை ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகளும் நடப்பது வழக்கம். இந்த ஆறு கோயில்களும் முருகனின் இருப்பிடமாக கருதப்படுகிறது. முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுடன் முருக பெருமானுக்கு காவடியும் எடுக்கப்படும்.

இந்த சிறப்பு வாய்ந்த நாளில் முருக பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமரின் வாழ்த்து பதிவில், "ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்" என தமிழில் வாழ்த்து கூறியுள்ளார்..

Scroll to load tweet…