பிரதமர் மோடி, ஆழ்கடலுக்குச் சென்று நீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரம் இருக்கும் இடத்தில் பிரார்த்தனை செய்தார்

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். துவாரகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓகா பெருநிலப்பகுதியையும், பேட் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில் சுமார் ரூ.980 கோடி செலவில் கட்டப்பட்ட சுதர்சன் சேது திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது, சுமார் 2.32 கி.மீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலமாகும்.

தொடட்ந்து, பேட் துவாரகா கோயிலில் பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, துவாரகாதீஷ் கோயிலுக்கும் சென்று வழிபட்டார். இதையடுத்து, நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருக்கும் இடத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.

நீருக்கடியில், ஆழ்கடலுக்குச் சென்ற பிரதமர் மோடி, நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருக்கும் இடத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். இந்த நகரம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் நெருங்கிய தொடர்புடைய புராதன நகரமாக இருந்தது. பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, இது நீர்நிலைகள் வழியாகச் செல்லும் பயணம் மட்டுமல்ல, துவாரகா நகரத்தின் புகழ்பெற்ற கடந்த காலத்தையும், இந்து மதத்தின் மிகவும் மதிக்கப்படும் கடவுள்களில் ஒருவரான கிருஷ்ணருடனான அதன் தொடர்பையும் உணர்த்தும் ஒரு வழியாகும்.

Scroll to load tweet…

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவம். ஆன்மீக மகிமை மற்றும் நித்திய பக்தி கொண்ட ஒரு பழங்கால சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.” என பதிவிட்டுள்ளார்.

உலகெங்கிலும் பழமையான நகரங்கள் பல நீருக்கடியில் மூழ்கியுள்ளன. இந்தியாவில் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் இடங்களாக இருந்த பூம்புகார், குமரிக்கண்டம், துவாரகா ஆகியவை கடலுக்குள் மூழ்கியதாக வரலாறு கூறுகிறது. இதில் துவாரகா நகாரம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இந்த நகரம், இந்தியாவில் உள்ள ஏழு புனித யாத்திரை மையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

மான் கி பாத் 110ஆவது எபிசோடில் பேசிய பிரதமர் மோடி!

நீருக்கடியில் மூழ்கிய துவாரகா நகரின் பழமையை கணிப்பது கடினம் என்கிறார்கள். இந்து மத நம்பிக்கையின்படி, இந்த நகரம் முதலில் கிருஷ்ணரால் நிறுவப்பட்டது. அவர் அங்கிருந்து வெளியேறிய பிறகு, அந்த நகரம் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இது தற்போதைய துவாரகா நகரின் அருகிலேயே உள்ளது. துவாரகை கடலில் இந்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் நீருக்கடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, சில பொருட்கள் கண்டறியப்பட்டன. அவை பண்டைய காலத்தில் கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகா நகரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எனப்படுகிறது.