துப்பாக்கிகள் குண்டுகள் துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், இரண்டு மீட்டர் தொலைவில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றாலும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள் குண்டுகள் துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், இரண்டு மீட்டர் தொலைவில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றாலும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் செல்வாக்குமிக்க நபர்களில் ஒருவராக விளங்குவதால் அவருக்கு எப்போது உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, பாதுகாப்பு வசதிகள் அதிகம் நிறைந்த கார்களையே பயன்படுத்தி வருகிறார். குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்திலும் பின்னர் நாட்டின் பிரதமராக பதவியேற்பு விழாவிற்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரையே நரேந்திர மோடி பயன்படுத்தினார். பின்னர், பிஎம்டபிள்யூ 7-சீரிஸ்ஹை-செக்யூரிட்டிகாரைநரேந்திரமோடிபயன்படுத்ததொடங்கினார். தொடர்ந்து, லேன்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் செண்டினல் காரையும் பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தினார். அதேபோல் டொயோட்டாவின் பழைய தலைமுறை காரான லேண்ட் க்ரூசரையும், தொடர்ந்து அதன் லேட்டஸ்ட் வெர்சனையும் பிரதமர் பயடுத்தினார்.

இந்தநிலையில் தான் பிரதமரின் பயன்பட்டிற்காக அதிநவீன புதிய மெர்சிடிஸ்மேபேக்எஸ்650 ரககார்வாங்கப்பட்டுள்ளது. ரஷ்யஅதிபர்விளாடிமிர்புதின்இந்தியாவந்திருந்தபோதுஹைதராபாத்இல்லத்தில்அவரைவரவேற்கபிரதமர்மோடிவந்திருந்தபோதுமெர்சிடிஸ்மேபேக்எஸ்650 காரில்அவர்முதல்முறையாகவந்திருந்தார். இந்தநிலையில், சமீபத்தில்அவர்கான்வாயில்இந்தபுதியகார் வலம் வந்துள்ளது.

Mercedes-Maybach S650 Guard கார் 2019ம்ஆண்டுஅறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக்காரில் VR10 என்றஉயர்ரகபாதுகாப்புஅம்சம்உள்ளது. ஒருதயாரிப்புமாடல்காரில்இருக்கக்கூடியஉயர்ந்தபாதுகாப்புஅம்சம்இதுதான் என்றும் கூறப்படுகிறது. கடந்தஆண்டுஇந்த ரககார்இந்தியாவில் 10.5 கோடிரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டதால் தற்போது இதன் விலை ரூ.12 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. Mercedes-Maybach S650 Guard காரில் 6.0 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 516 பிஹெச்பி ஆற்றலையும் 900 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. அதே நேரத்தில் இந்த காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்கு வாங்கப்பட்டுள்ள இந்த காரில் ஜன்னல்கள் ஸ்டீல் கோர் புல்லட்கள் தாக்குதலுக்கும் தாக்குப்பிடிக்கும். வெடி குண்டு தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. ERV என்ற வெடிகுண்டு தாக்குதல் சோதனைக்கான சான்றிதழையும் இக்கார் பெற்றிருக்கிறது. 2 மீட்டர் தொலைவில் 15 கிலோ TNT வெடிகுண்டு தாக்குதல் நடந்தால் கூட இந்தக் காரில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. அதே போல இந்தக் காரின் கேபினில் பிரத்யேக ஆக்சிஜன் சப்ளையும் இடம்பெற்றுள்ளது. கேஸ் தாக்குதல் ஏற்பட்டால் இக்காரின் ஆக்சிஜன் சப்ளை இதில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பை தரும்.

அதிநவீன காரில் எரிபொருள் டேங்க் விஷேச உலோகத்தால் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏதேனும் தாக்குதல்களில் ஏற்படும் ஓட்டைகள் தானாகவே சரிசெய்துகொள்ளும். AH-64 Apache tank attack ஹெலிகாப்டர்களின் பயன்படுத்தப்படும் உலோகத்தில் தான் இந்தக் காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காரின் டயர்கள் ஆபத்து நேரங்களில் பாதிப்படைந்தாலும் தொடர்ந்து இயங்கும். பிரதமரின் பாதுகாப்பிற்காக SPG சிறப்பு பாஅதுகாப்பு குழுவினர் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த காரை வாங்கியுள்ளனர்.

சிலஆண்டுகளுக்குமுன்னர்பிரதமர்மோடிமேபேக்கூலிங்கிளாஸ்களைஅணிந்திருந்ததுபரபரப்பாகபேசப்பட்டது. ஆனால்இன்றுஅவரின்கான்வாயில்விஷேசபாதுகாப்புஅம்சங்களுடன்கூடியபுத்தம்புதியமெர்சிடிஸ்மேபேக்எஸ்650 கார்இணைக்கப்பட்டுள்ளது. ரேஞ்ச்ரோவர், லேண்ட்குரூசர்மற்றும்பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்கார்களுடன்பிரதமரின்கான்வாயில்புத்தம்புதியமெர்சிடிஸ்மேபேக்எஸ்650 ரககாரும்சமீபத்தில்இணைந்துள்ளது.