பெட்ரோல் விலை என்ன இப்படி ஏறிப்போச்சு !! நொந்து கொள்ளும் பொது மக்கள் !!!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே நாளில் கடுமையாக உயர்ந்துள்ளதால் வொகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனன
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயித்து வந்தது. சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றம் செய்து வந்ததது.
இந்நிலையில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியின்போது
இந்திய எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.
இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.
தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.71.77ஆகவும், டீசலின் விலை 11 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.60.90ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.