இளைஞர் ஒருவர் எம்எல்ஏவிடம் பெண் பார்க்கும்படி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் மாவட்டத்தில் ஆச்சர்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் மாவட்டத்தில் குல்தாபாத் பகுதி உள்ளது. இந்த பகுதியில் கட்சி தொண்டர் ஒருவர், தாக்கரே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு போன் போட்டு தனக்கு பெண் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, எனக்கு 8 ஏக்கர் நிலம் உள்ளது.

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

ஆனால் எனக்கு பெண் (திருமணத்திற்கு) கொடுக்க யாரும் தயாராக இல்லை.நீங்கள் எனக்கு பெண் பார்க்க வேண்டும் என்று கூறினார். உடனே சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ ராஜ்புத், உங்களோட பயோடேட்டாவை தனக்கு அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பேசிய எம்.எல்.ஏ ராஜ்புத், 2,000 பேர் வசிக்கும் கிராமம் என்றால், அங்கு சுமார் 100-150 திருமணமாகாத இளைஞர்களைக் காணலாம். அவர்களுக்கு 100 ஏக்கர் நிலம் இருந்தாலும், திருமணத்திற்குப் பெண் கிடைப்பது கடினம் என்று கூறினார். இந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..வெளியானது புதிய ராயல் என்ஃபீல்டு - சூப்பர் மீடியர் 650யின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!

இதையும் படிங்க..தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யணும்.. ஆளுநருக்கு பாதுகாப்பே இல்லை! இவரே இப்படி சொல்லிட்டாரு.!!