மே.9,10 ஆகிய தேதிகளில் அரக்கோணம் - காட்பாடி வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
மே.9,10 ஆகிய தேதிகளில் அரக்கோணம் - காட்பாடி வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. மே ஒன்பதாம் தேதி மற்றும் பத்தாம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் அரக்கோணம் - காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மேலப்பாக்கம் மற்றும் மகேந்திரவாடி ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கோவையில் ஓடும் பேருந்தில் இருந்து வெளியேறிய புகையால் ஓட்டம் பிடித்த பயணிகள்
இது குறித்து ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் கோவை- சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண் 12680) வரும் மே 9, மே 10 ஆகிய தேதிகளில் காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.
இதையும் படிங்க: கோவையில் தென்னையை பதம் பார்த்து, இளநீரை ருசி பார்த்த ஒற்றை காட்டு யானை
இதேபோல் மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண் 12679) வரும் மே 9, மே 10 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே இயக்கப்படாது. மாறாக காட்பாடியில் இருந்து இருந்து புறப்பட்டு கோவை ரயில் நிலையம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
