சுருக்கம்
Pakistan Drone Attack against India : பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலில் ஃபிரோஸ்பூர் பகுதியில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
ஃபிரோஸ்பூரில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்
Pakistan Drone Attack against India : பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூரில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக எஸ்எஸ்பி பூபிந்தர் சிங் சித்து தெரிவித்தார். "மூன்று பேர் காயமடைந்ததாக தகவல் கிடைத்தது. அவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். பெரும்பாலான ட்ரோaன்களை ராணுவம் செயலிழக்கச் செய்துள்ளது," என்று அவர் கூறினார். இந்திய விமானப்படை ஃபிரோஸ்பூர் பகுதியில் பெரும்பாலான ட்ரோன்களை இடைமறித்துள்ளது. மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்திய எல்லையில் பகுதியில் 26 இடங்களில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பொதுமக்கள் கட்டமைப்புகளை குறிவைக்க பாகிஸ்தான் முயற்சித்த ஒரு நாள் கழித்து, வெள்ளிக்கிழமை ஜம்மு, சாம்பா, பதான்கோட் பகுதியில் மீண்டும் பாகிஸ்தானின் ட்ரோன்கள் காணப்பட்டன. ஜம்முவின் சாம்பா பகுதியில் சிவப்பு நிற கோடுகள் காணப்பட்டன, மேலும் இந்திய விமானப்படை பாகிஸ்தான் ட்ரோன்களை இடைமறித்தபோது வெடிச்சத்தம் கேட்டது. இதற்கிடையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
முழுமையான மின் தடை:
ஜம்மு காஷ்மீரில் அக்னூர் மற்றும் உதம்பூர் பகுதியிலும்; ஹரியானாவில் அம்பாலா மற்றும் பஞ்ச்குலா பகுதியிலும் முழுமையான மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரிலும் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீண்டும் ஒரு நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மே 7 மற்றும் 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் ராணுவம் பல வான்வெளி மீறல்கள் மற்றும் ட்ரோன் ஊடுருவல்களை மேற்கொண்டு இந்திய ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்தது.
கர்னல் சோஃபியா குரேஷி
வெள்ளிக்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில், 36 இடங்களில் 300 முதல் 400 ட்ரோன்கள் நிறுத்தப்பட்டதாகவும், பல ட்ரோன்கள் இந்தியப் படைகளால் இயக்க மற்றும் இயக்கமற்ற முறைகளைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்தார். ஆரம்பகட்ட விசாரணையில், ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்ட அசிஸ்கார்ட் சோங்கர் மாதிரிகள் என்று தெரியவந்துள்ளது.
கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர் சந்திப்பில், "மே 7 மற்றும் 8 ஆம் தேதி இரவு, பாகிஸ்தான் ராணுவம் மேற்கு எல்லையில் பல முறை இந்திய வான்வெளியை மீறி ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்தது. இது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் கனரக ஆயுதங்களால் துப்பாக்கிச் சூடு நடத்தியது. 36 இடங்களில் ஊடுருவ முயற்சிக்க சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன." அவர் மேலும் கூறுகையில், “இந்திய ஆயுதப்படைகள் இயக்க மற்றும் இயக்கமற்ற வழிகளைப் பயன்படுத்தி இந்த ட்ரோன்களில் பலவற்றை சுட்டு வீழ்த்தின. இவ்வளவு பெரிய அளவிலான வான் ஊடுருவல்களின் நோக்கம் வான் பாதுகாப்பு அமைப்புகளை சோதிப்பதும், உளவுத் தகவல்களை சேகரிப்பதுமாகும்.
டிரோன்களின் சிதைவுகளை தடயவியல் விசாரணை செய்யப்படுகிறது. ஆரம்பகட்ட அறிக்கைகள் அவை துருக்கிய அசிஸ்கார்ட் சோங்கர் ட்ரோன்கள் என்று கூறுகின்றன...” புதன்கிழமை இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத கட்டமைப்புகளை குறிவைத்த இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தானின் பதிலடி முயற்சி வந்தது. இந்த நடவடிக்கை ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நேரடி பதிலடியாகும்.