ஓபன்ஹைமருக்கு 1954 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை வழங்க பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்வந்தார் என்று அமெரிக்க எழுத்தாளர் Kai Bird தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஜூலியஸ் ராபர்ட் ஓபன்ஹைமரின் வாழ்க்கையை மையமாக வைத்து பிரபல ஹாலிவுட் இயக்குனர் இயக்கி உள்ள படம் Oppenheimer. கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியான Oppenheimer படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல அமெரிக்க எழுத்தாளர்களான Kai Bird and Martin J. Sherwin இணைந்து எழுதிய American Prometheus: The Triumph and Tragedy of J Robert Oppenheimer என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்தே கிறிஸ்டோபர் நோலன் இப்படத்தை இயக்கி உள்ளார். 

இந்த நிலையில் இந்த புத்தகத்தின்இணைஆசிரியர் Kai Bird, ஓபன்ஹைமருக்கு 1954 ஆம்ஆண்டுஇந்தியகுடியுரிமைவழங்கபிரதமர்ஜவஹர்லால்நேருமுன்வந்தார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "1954ல்ஓப்பன்ஹைமர்அவமானப்படுத்தப்பட்டபிறகு... நேருஅவரைஇந்தியாவிற்குவரும்படி அழைத்தார். அவரை இந்திய குடியுரிமை வழங்கவும் நேரு முன்வந்தார். ஆனால்ஆழ்ந்ததேசபக்தியுள்ளஅமெரிக்கர்என்பதால்ஓப்பன்ஹெய்மர்அதைபெரிதாகக்கருதவில்லைஎன்றுநான்நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின்மிகப்பெரியவிஞ்ஞானியாகக்கொண்டாடப்பட்ட 9 ஆண்டுகளுக்குப்பிறகு, ஓப்பன்ஹைமர் "ஒருபயங்கரமானநீதிமன்றத்தில்" வீழ்த்தப்பட்டதாகவும், மெய்நிகர்பாதுகாப்புவிசாரணையில்அவரதுபாதுகாப்புஅனுமதிபறிக்கப்பட்டதாகவும்Kai Bird கூறினார்

"உடலுறவுகொள்ளும் காட்சியில் கீதையில் வரும் வசனங்கள்" - Oppenheimer படத்துக்கு எதிராக பகீர் குற்றச்சாட்டு!

ஆகஸ்ட் 1945-ல்ஹிரோஷிமாமற்றும்நாகசாகியில் போடப்பட்ட அணு குண்டுகள்பற்றிஓபன்ஹெய்மர்கலவையானஉணர்ச்சிகளைக்கொண்டிருந்தார்என்றும்Kai Bird கூறினார்ஓபன்ஹைமர்மிகவும்சிரமப்பட்டதாகவும் அவர் கூறினார். “ 1945க்குப்பிறகு, ஓப்பன்ஹைமர்ஹிரோஷிமாமற்றும்நாகசாகியில்நடந்தவற்றைப்படித்து, பல்லாயிரக்கணக்கானமக்கள்உடனடியாகஎரிந்துகொல்லப்பட்டதைப்புரிந்துகொண்டார். இரண்டுகுண்டுவெடிப்புகளுக்குப்பிறகுஅவர்உண்மையில்ஆழ்ந்தமனஅழுத்தத்தில்மூழ்கினார். ஆனால்உடனடியாகப்பேசத்தொடங்கினார்1954 அக்டோபரில்ஓபன்ஹைமர்ஒருஅணு ஆயுதங்களைபயங்கரவாதஆயுதங்கள் என்று கூறினார்.அவைதற்காப்புஆயுதங்கள்அல்ல. மேலும்அவைஅடிப்படையில்ஏற்கனவேதோற்கடிக்கப்பட்டஎதிரிமீதுபயன்படுத்தப்பட்டன." என்று தெரிவித்தார்.

ஓபன்ஹைமர்இந்துஆன்மீகம்மற்றும்பகவத்கீதையின்மீது ஈர்ப்பு கொண்டிருந்ததாக Kai Bird தெரிவித்தார். பகவத் கீதையை படிக்க வேண்டும் என்பதற்காக ஓப்பன்ஹைமர் பெர்க்லிபல்கலைக்கழகத்தின்ஒரேசமஸ்கிருதஅறிஞரானஆர்தர் ரைடரிடம் இருந்து சமஸ்கிருதம் பயின்றார். இதனால் தான் சமஸ்கிருதத்தில்கீதையைப்படிக்கமுடியும் என்று அவர் கருதினார். நான் உலகத்தை அழிக்கும் காலனாகி விட்டேன்.. நான் உலகங்களை அழிப்பவன் என்று ஓப்பன்ஹைமர் கூறினார்.” என்று Kai Bird நினைவுகூர்ந்தார்.

உலக வரலாற்றில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகளில் முக்கியமானது ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டு சம்பவம். அமெரிக்கா கட்டவிழ்த்த அணு ஆயுத குண்டு வீச்சினால் ஏற்பட்ட வடு இன்னும் மாறாமல் இருக்கிறது. சுமார் 3 லட்சம் பேரின் உயிரை காவு வாங்கிய இந்த கொடூரம் மனித இனத்திற்கு மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. உலக நாடுகளின் வரலாற்றையே மாற்றிய இந்த சம்பவத்திற்கு காரணமான அணுகுண்டை உருவாக்கிய ஓப்பன்ஹைமரை அணுகுண்டை விட சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க அமெரிக்கா வலியுறுத்தியது.

ஆனால் ஏற்கனவே அமெரிக்கா செய்த செயலால் மன உளைச்சலில் இருந்த ஓபன்ஹெய்மர் அதற்கு மறுத்துவிட்டார். மறுபுறம் அமெரிக்கா, அணுகுண்டை உருவாக்கிய 4 ஆண்டுகளில் ரஷ்யாவும் அணுகுண்டை உருவாக்கியது. இதனால் ஓப்பன்ஹைமர் ரஷ்ய உளவாளி என்று சந்தேகித்த ரஷ்யா அவர் மீது நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில் ஓப்பன்ஹைமர் ரஷ்ய உளவாளி தான் தீர்ப்பு வரவே ஓப்பன்ஹைமர் தேச துரோகி என்று அமெரிக்கா முத்திரை குத்தியது. எனினும் விசாரணை கமிஷனில் இருந்த வெளியான ஆவணங்களில் ஓப்பன்ஹைமர் அமெரிக்காவிற்கு எதிராக செய்யவில்லை என்பது அவர் உளவாளி இல்லை என்பது உறுதியானது. 1963-ல் அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, என்ரிகோ ஃபெர்மி என்ற அமெரிக்காவின் உயரிய விருதை ஓப்பன்ஹைமருக்குக் வழங்கினார்..1967-ம் ஆண்டு, தொண்டை புற்றுநோயால் காரணமாக மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1,200 கோடிக்கு லண்டனில் மேன்ஷன் வாங்கிய இந்திய தொழிலதிபர் ரவி ரூயா!