Asianet News TamilAsianet News Tamil

Omicron : 7 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான்… மேற்கு வங்கத்தில் உச்சக்கட்ட பரபரப்பு!!

மேற்கு வங்காளத்திலும் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி உள்ள நிலையில் அபுதாபியில் இருந்து சமீபத்தில் ஐதராபாத் வழியாக கொல்கத்தா வந்த குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Omicron for a 7-year-old boy in West Bengal
Author
West Bengal, First Published Dec 15, 2021, 7:44 PM IST

மேற்கு வங்காளத்திலும் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி உள்ள நிலையில் அபுதாபியில் இருந்து சமீபத்தில் ஐதராபாத் வழியாக கொல்கத்தா வந்த குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

Omicron for a 7-year-old boy in West Bengal

ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் அதிகபட்சமாக மும்பையில் இதுவரை 20 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.  ராஜஸ்தானில் 9 பேர், குஜராத்தில் 4 பேர், கர்நாடகாவில் 3 பேர், டெல்லியில் 6 பேர், சண்டிகர், ஆந்திரா, கேரளாவில் தலா ஒருவர் என இதுவரை 53 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Omicron for a 7-year-old boy in West Bengal

மகாராஷ்டிராவில் மட்டும் 28 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்காளத்திலும் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. அபுதாபியில் இருந்து சமீபத்தில் ஐதராபாத் வழியாக கொல்கத்தா வந்த குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த சிறுவன் முர்ஷிதாபாத் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின் பெற்றோருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. நாளுக்கு நாள் இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios