கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பம்பை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அய்யப்பன் கோவிலுக்கு வர பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு நடைபெற்ற நிறைபுத்தரிசி பூஜையில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் கொட்டும் கனமழையில் கோவிலின் தந்திரி சோகத்துடன் அமர்ந்துள்ளார்.

தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கேரளாவில் மழை கொட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்களக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கிட்டததட்ட 8000 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளுக்குபிறகு, இடுக்கிஅணைமுழுவதுமாகநிரம்பி 5 மதகுகளும்திறந்துவிடப்பட்டுள்ளது. . இதனால்இடுக்கிமற்றும் கரையோரமாவட்டங்கள் வெள்ளதால்கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளன.

பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் பம்பைநதியில்வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.. சபரிமலைக்குசெல்லும்வழியானபத்தனம்திட்டாமாவட்டத்தில்உள்ளஎல்லாஅணைகளும்திறக்கப்பட்டுள்ளது. இதனால்பம்பைநதியில்அதிகநீர்திறந்துவிடப்பட்டு, கரையோரமக்களுக்குவெள்ளஅபாயஎச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திருவிதாங்கூர்தேவஸ்தானம்போர்டுதலைவர்அ.பத்மகுமார் வெளியிட்ட அறிக்கையில், பம்பைமற்றும்திரிவேணிநதிகளில்வெள்ளம்கரைபுரண்டுஓடுவதால், சபரிமலைக்குசெல்லும்பாலம்துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால்பக்தர்கள்யாரும்சபரிமலைக்குவரவேண்டாம். விவரம்தெரியாமல்பக்தர்கள்வந்தாலும், பம்பையிலிருந்துதிரும்பஅனுப்பப்படுவர். நிறைபுத்தரிசி தரிசனம்வழக்கம்போல்நடைபெறும். அதில்எந்தமாற்றமும்இருக்காது. என்றுதெரிவித்திருந்தார்..

இந்நிலையில் கடும் வெள்ளம் காரணமாக அய்யப்பன் கோவிலிலுக்கு கடந்த 2 நாட்களாக பக்தர்கள் யாரும் வரவில்லை. வானம் பிளந்ததுபோல் கோவில் பகுதியில் மழை கொட்டித் தீர்த்து வருவதால்அப்பகுதியே வெறிச்சோடிக் காணப்படுகிறது.

வழக்கம் போல் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றாலும் பக்தர்கள் ஒருவர் கூட இல்லாததால், கொட்டும் மழையில் தந்திரி தனியாக கோவிலில் சோகத்துடன் அமர்ந்திருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.