தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்று... தொழுகை நடத்த கூடாது! உச்சநீதிமன்றம்
தாஜ்மகாலில் தொழுகை நடத்த, முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக்பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரரித்தது.
தாஸ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர். தாஸ்மகால் ஏழு அதிசயங்களில் ஒன்றாகு. இங்கு நாடு முழுவதிலும் இருந்து பலர் வந்து செல்கின்றனர்.
தொழுகை நடத்த விரும்புபவர்கள் மற்ற மசூதிக்கு சென்று தொழுகை நடத்தலாமே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் கூடுதல் நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியே என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.