Asianet News TamilAsianet News Tamil

மோடியின் லட்சத்தீவு பயணம்.. கேலி செய்து இனவெறி கருத்தை வெளியிட்ட ஜாஹித் ரமீஸ் - யார் இவர்? என்ன நடந்தது?

Racist Remark Against Indians : இன்று வெள்ளிக்கிழமை, ஜனவரி 5ம் தேதி மாலத்தீவின் ஆளும் முற்போக்குக் கட்சியின் (பிபிஎம்) கவுன்சில் உறுப்பினரான ஜாஹித் ரமீஸ், தனது X தளத்தில் இந்தியர்களை கேலி செய்து சில பதிவுகளை போட்டுள்ளது பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

Netizens slams Maldives Ruling Party Member zahid rameez for his racist remark after Pm Modi Lakshadweep visit ans
Author
First Published Jan 6, 2024, 9:27 PM IST

இந்தியர்களுக்கு எதிரான மிகவும் இனவெறி கொண்ட அந்த கருத்து பிரபலமான X பயனர் திரு. சின்ஹாவின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் வந்ததுள்ளது குறிபிடித்தக்கது. சின்ஹா வெளியிட்ட பதிவில் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்தின் படங்களைப் பகிர்ந்துள்ளார். மாலத்தீவைச் சேர்ந்த அரசியல்வாதியின் அவமதிப்புக் கருத்துக்களால் ஆத்திரமடைந்த நெட்டிசன்கள், எதிர்காலத்தில் விடுமுறைக்காக மாலத்தீவுக்குச் செல்ல வேண்டாம் என்று தீர்மானித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 4 அன்று, பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய லட்சத்தீவு பயணத்தின் சில படங்களைப் பகிர்ந்து கொண்டார், அவர் தனது 'Vocal for Local' என்ற முழக்கத்திற்கு உந்துதலாகவும், மேலும் ஊக்கமளிக்கும் முயற்சியாகவும், இயற்கை எழில் கொஞ்சும் அந்த தீவை மக்கள் கட்டாயம் பார்வையிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

L1 புள்ளியை அடைந்து சாதனை படைத்த இஸ்ரோவின் ஆதித்யா எல்1

பிரதமர் மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்தின் படங்களை திரு. சின்ஹா ​​பகிர்ந்துள்ளார். அந்த படத்தில், இயற்கை எழில் கொஞ்சும் தீவின் அழகிய கடற்கரையில் இந்தியப் பிரதமர் நடந்து செல்வதைக் காணலாம். மேலும் “என்ன ஒரு சிறந்த நடவடிக்கை! இது சீனாவின் புதிய கைப்பாவையான மாலத்தீவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும், மேலும் அது லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும்" என்று எழுதியிருந்தார்.

திரு. சின்ஹாவின் அந்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக, மாலத்தீவு நாட்டின் ஆளும் கட்சியின் நிர்வாகியான ஜாஹித் ரமீஸ், நேற்று ஜனவரி 5 அன்று ஒரு பதிவினை எழுதினார், அதில் “இந்த நடவடிக்கை மிகவும் சிறப்பானது தான். இருப்பினும், எங்களுடன் போட்டியிடும் எண்ணம் மாயையானது. நாங்கள் வழங்கும் சேவையை அவர்கள் எப்படி வழங்க முடியும்? அவர்களால் எப்படி இவ்வளவு சுத்தமாக தங்கள் இடத்தை வைத்துக்கொள்ளமுடியும்? அந்த அறைகளில் வீசும் அந்த வாசனை மிகப்பெரிய வீழ்ச்சியாக இருக்கும்" என்றார். 

இதனையடுத்து பல X பயனர்கள் இந்தியர்கள் சுகாதாரமற்றவர்களாகவும், அழுக்காகவும் இருப்பதாக PPM உறுப்பினர் கூறிய இனவெறி அறிக்கைக்கு தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மாலத்தீவைப் புறக்கணிப்பதாகவும், லட்சத்தீவுகளை விருப்பமான விடுமுறை இடமாக உயர்த்துவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

“இந்தியர்கள் மாலத்தீவுகளைப் புறக்கணித்து, லட்சத்தீவுக்குச் செல்ல வேண்டும் மோடி எங்கள் இந்த அழகான யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சிறப்பு விஜயம் செய்ததற்காக மோடி ஜிக்கு நன்றி” என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். "இப்போது ஒரு வருடத்திற்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகையின் தரவைச் சரிபார்க்கவும், மாலத்தீவையும் விஞ்சக்கூடிய ஒரு எழுச்சியை நீங்கள் காண்பீர்கள் & மாலத்தீவின் சமீபத்திய முன்னேற்றங்கள் மூலம், பாரதத்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதன் பொருளாதாரத்திற்கு என்ன அர்த்தம் என்பதை உணர இது அவர்களுக்கு ஒரு செய்தியாக இருக்கலாம். இது மிகவும் தாமதமானது என்று நினைக்கிறேன்!!" என்று மற்றொரு X பயனர் கூறியுள்ளார்.

 

மற்றொரு X பயனரும் ரமீஸ் அனுப்பிய இனவெறிக் கருத்தைக் கண்டித்துள்ளார். "அறைகளில் நிரந்தர வாசனை ஒன்று" இருப்பதாக மாலத்தீவு அரசு அதிகாரி ஒருவர் கூறுகிறார். இந்தியர்களே, தகுதியில்லாதவர்களுக்கு பணத்தை செலவிடுவதை நிறுத்துங்கள். அவர்களை தலைகுனிய செய்யுங்கள்” என்று கூறியுள்ளார். 

மேலும் மேற்குறிய அந்த பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக, மற்றொரு பயனர் இந்தியர்களை அவமதிக்கும் வகையில் சென்ற ஜாஹித் ரமீஸ் சமீபத்தில் இந்திய குடியுரிமையை எவ்வாறு கோரினார் என்பதை எடுத்துக்காட்டுகிறார். ரமீஸின் கடந்த ஜூன் 28, 2023 வெளியிட்ட ஒரு பதிவின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து, “அவர் இந்தியக் குடியுரிமையை நாடுகிறார். வெறுப்பைப் பரப்புவதற்குப் பெயர் பெற்ற ஜாஹித் போன்ற நபர்கள் இந்திய குடியுரிமை பெறுவதிலிருந்து தடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றார்.

ஜாஹித் ரமீஸின் இடுகையின் சாட்சியமாக, ஜூன் 28, 2023 அன்று, அவர் மாலத்தீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தைக் குறியிட்டு, அவருக்கு இந்தியாவின் குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். 

இந்தியர்களுக்கு எதிரான ஜாஹித் ரமீஸின் இனவெறிக் கருத்துக்கு பல சமூக ஊடக பயனர்கள் கோபமடைந்த பிறகு, ஆளும் பிபிஎம் உறுப்பினர், மன்னிப்பு கேட்கவோ அல்லது அவரது அறிக்கையைத் திரும்பப் பெறவோ இல்லை அதற்கு பதிலாக வேறு விதத்தில் பேசியுள்ளார். தான் இஸ்லாமியர் என்பதை கூறிய அவர் பேசத்துவங்கியுள்ளார். ரமீஸ் எழுதிய மற்றொரு பதிவில், “நான் இந்தியாவில் பிறந்தேன், மேலும் நான் ஒரு சட்டமியற்றுபவர் அல்ல. எனது எண்ணங்களை ட்வீட் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். குறிப்பாக உங்கள் மக்கள் எங்களை, முஸ்லிம்கள் மற்றும் பாலஸ்தீனத்தைப் பற்றி மிகவும் புண்படுத்தும் கருத்துக்கள் இருக்கும்போது, ​​ஏன் எதிர்வினை இருக்கிறது என்பது குழப்பமாக இருக்கிறது. எப்படியிருந்தாலும், நான் பொதுவாக கருத்து தெரிவிப்பதில்லை என்றார்.

"அசாதாரண சாதனை.. அறிவியலின் புதிய எல்லை".. ஆதித்யா L1 வெற்றி - விஞ்ஞானிகளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios