நேபத்தில் 22 பேருடன் புறப்பட்ட விமானம் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேபத்தில் 22 பேருடன் புறப்பட்ட விமானம் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் தாரா ஏர் விமானம் இன்று காலை 9.55 மணிக்கு நான்கு இந்தியர்கள் உட்பட 22 பேருடன் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமாகியுள்ளது. ட்வின் ஓட்டர் 9N-AET விமானத்தில் நான்கு இந்தியர்கள் (மும்பையைச் சேர்ந்தவர்கள்) தவிர, இரண்டு ஜேர்மனியர்கள் மற்றும் 13 நேபாள பயணிகள் இருந்தனர் என்று ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேற்கு மலைப் பகுதியில் உள்ள ஜோம்சம் விமான நிலையத்தில் காலை 10:15 மணிக்கு விமானம் தரையிறங்க திட்டமிடப்பட்டது. போக்ரா-ஜோம்சம் விமானப் பாதையில் கோரேபானிக்கு மேலே வானத்தில் இருந்து விமானம் கோபுரத்துடன் தொடர்பை இழந்ததாக விமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜோம்சோம் விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் கூற்றுப்படி, ஜோம்சோமின் காசாவில் ஒரு பெரிய சத்தம் பற்றி உறுதிப்படுத்தப்படாத அறிக்கை உள்ளது. காணாமல் போன விமானங்களைத் தேடுவதற்காக நேபாள அரசாங்கம் முஸ்டாங் மற்றும் பொக்காராவிலிருந்து இரண்டு தனியார் ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது. நேபாள ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தரை வழி வழியாக தேடுதல் பணியை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுக்குறித்து தாரா ஏர் நேபாளம் பரந்த உள்நாட்டு விமான நெட்வொர்க்கை கொண்டுள்ளது. நேபாளத்தில் உள்ள வேறு எந்த விமான நிறுவனங்களும் தொலைதூர பிரிவுகளுக்கு எங்களைப் போல் விரிவாகவும் அடிக்கடியும் பறந்து செல்வதில்லை.

Scroll to load tweet…

உணவு தானியங்கள், மருந்துகள், நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாங்கள் உள்நாடுகளுக்குக் கொண்டு செல்கிறோம் மற்றும் மீட்பு நோக்கங்களுக்காக விமானங்களை இயக்குகிறோம் என்று விமானத்தில் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான மலையின் தாயகமான நேபாளத்தில், உள்நாட்டு விமான வலையமைப்பில் ஏற்கனவே விபத்துக்கள் பதிவாகியுள்ளது, கடந்த 2016 ஆம் ஆண்டில், தாரா ஏர் மூலம் இயக்கப்படும் ட்வின் ஓட்டர் டர்போபிராப் விமானம் மியாக்டியின் மேற்கு மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 23 பேர் உயிரிழந்தனர். மூன்று பணியாளர்களைத் தவிர, ஒரு சீனர் மற்றும் ஒரு குவைத் நாட்டவர் உட்பட 20 பயணிகள் இந்த மோசமான விமானத்தில் பயணம் செய்தனர்.