நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த உத்தரவு காங்கிரஸ் தலைவர்களுக்கு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை (Enforcement Directorate - ED) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை (Charge Sheet) டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தனிநபர் அளித்த புகார்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளில் உள்ள முக்கிய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை (Money Laundering) தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கு, காவல்துறை போன்ற வேறு எந்த ஒரு விசாரணை அமைப்பின் முதல் தகவல் அறிக்கை (FIR) அடிப்படையிலும் பதிவு செய்யப்படவில்லை. மாறாக, இது ஒரு தனிநபர் அளித்த புகார் அடிப்படையில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.

தாமதமான FIR

காவல்துறை போன்ற அமைப்பின் முறையான விசாரணைக்குப் பின்னரே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்யவில்லை.

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் என ஆரம்பத்தில் முதல் தகவல் அறிக்கையிலேயே வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மாறாக, இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறை சமீபத்தில் தான் முதல் தகவல் அறிக்கையையே பதிவு செய்திருக்கிறது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமியின் மனு

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாகக் கூறி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அளித்த மனுவின் அடிப்படையில் தான் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

அந்த மனுவில், நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துகள் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு அபகரிக்கப்பட்டதாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்தத் தனிநபர் புகாரை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறை நடத்திய விசாரணை மற்றும் அதன் குற்றப்பத்திரிகையைத்தான் நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது.

இந்த நீதிமன்ற உத்தரவு, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலுக்கு இந்த வழக்கில் ஒரு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.