இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 'தேசிய கீதம்' பாடவில்லை... ஏன் தெரியுமா?
இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக “ மவுண்ட் பேட்டன்” தலைமையில் , ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது.அப்பொழுது எழுப்பப்பட்ட ஒலியை கேட்டு, அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று “ வந்தே மாதரம் “ என பாடினார்.
பின்னர், அரசியல் அமைப்பு சபையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
தேசிய கீதம் பாடாதது ஏன் ?
இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியளவில், நாட்டுக்கான தேசிய கீதம் இல்லை.1911 ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட “ ஜன கண மன” பாடல், 1950 ஆம் ஆண்டு தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே தான் அன்றைய தினத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டது.