Asianet News TamilAsianet News Tamil

24 மணி நேரத்தில் 3,390 பேர்..! இந்தியாவில் எகிறும் கொடூர கொரோனா பாதிப்பு..!

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 56,342 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 1,866 பேர் பலியாகி இருக்கின்றனர்.

more than 3000 people were tested corona positive in a single in india
Author
Maharashtra, First Published May 8, 2020, 10:26 AM IST

உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்த போதும் கடந்த சில நாட்களாக தினமும் 2000 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.

more than 3000 people were tested corona positive in a single in india

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 56,342 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 1,866 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஸ்டிரா இருக்கிறது. அங்கு கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை அங்கு 17,974 பேர் பாதிக்கப்பட்டு 694 பேர் மரணமடைந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக குஜராத்தில் 7,012 பேரும், டெல்லியில் 5,980 பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

more than 3000 people were tested corona positive in a single in india

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆறுதல் தரும் செய்தியாக கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனாவில் இருந்து 16,540 மக்கள் பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios