Asianet News TamilAsianet News Tamil

வீட்டுக்கு பயந்து காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறிய பெற்றோர்கள்.!

 அமர்ஜித், கிருஷ்ணபிரியா 2 பேரும் திடீரென மாயமானார்கள். உடனே 2 பேரின் பெற்றோர்களும் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடிவந்தனர்.

love couple committed suicide by hanging
Author
Thiruvananthapuram, First Published Sep 27, 2021, 7:54 PM IST

பெற்றோர்களுக்கு பயந்து காதல் ஜோடி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்சிசியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் அருகே குலசேகரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கலாதரன். அவரது மகன் அமர்ஜித்(23). ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். அவரது மகள் கிருஷ்ணபிரியா(21). விமான பணிப்பெண் வேலைக்கு படித்து வந்துள்ளார். ஒரே பகுதியில் இருப்பதால் இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. 

love couple committed suicide by hanging

 இதையடுத்து, 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. தொடர்ந்து செல்போன் சமூக வலைதளங்கள் மூலம் யாருக்கும் தெரியாமல் சில வருடங்களாக காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அமர்ஜித், கிருஷ்ணபிரியா 2 பேரும் திடீரென மாயமானார்கள். உடனே 2 பேரின் பெற்றோர்களும் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், நேற்று அந்த பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு மரத்தில் 2 பேரும் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கிடந்தனர். அப்பகுதியாக சென்ற மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அமர்ஜித், கிருஷ்ணபிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலர்கள் இருவரும் பெற்றோர்களுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.  ஆனால்,  2 பேரின் பெற்றோரும் காதல் விவகாரம் தங்களுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் திருமணம் செய்து வைத்து இருப்போம் என்று கூறி கதறிய சம்பவம் காண்போரின் கண்களில் கண்ணீர் வந்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios