ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தின் பெண் தலைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் பல வீடுகளுக்கு 'உத்தரவாத அட்டைகளை' விநியோகித்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச காங்கிரஸ் அலுவலகத்தில், 1 லட்ச ரூபாய்க்கான உத்தரவாத அட்டைக்காக பெண்கள் வரிசையில் நிற்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி ஒரு ஆச்சரியமான திருப்பத்தை ஏற்படுத்திய நிலையில், லக்னோவில் பல பெண்கள் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே வரிசையில் நின்று பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்த ‘உத்தரவாத அட்டைகள்’ வேண்டும் என்று வரிசையில் நின்ற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேர்தலுக்கு முன்னதாக, ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தின் தலைவிக்கும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்படும் என காங்கிரஸ் பல வீடுகளுக்கு 'உத்தரவாத அட்டைகளை' வழங்கியது. வாக்கு எண்னிக்கை முடிந்த அடுத்த நாளான இன்று கடும் வெயிலில் லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான முஸ்லிம் பெண்கள் அணிவகுத்து நின்றனர்.

சில பெண்கள் 'உத்தரவாத அட்டைகள்' கோரிய நிலையில், அவற்றைப் பெற்றவர்கள் தங்கள் கணக்கில் பணத்தைப் பெறுவதற்கு முன்பு படிவங்களைச் சமர்ப்பித்தனர். சில பெண்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து பணத்தைப் பெறுவதற்கான விவரங்களுடன் தங்கள் படிவங்களைச் சமர்ப்பித்த பிறகு ரசீதுகளைப் பெற்றதாகக் கூறினர்.

காங்கிரஸ் கட்சி மகாலட்சுமி திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள (பிபிஎல்) பிரிவைச் சேர்ந்த குடும்பத் தலைவர்களின் கணக்கில் மாதந்தோறும் ரூ. 8,500 நேரடியாக வரவு வைக்கப்படும் என்று கட்சி உறுதியளித்தது. இத்திட்டம், காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசின் க்ருஹ லட்சுமி உத்தரவாதத் திட்டத்தைப் போன்றது. இதில் ஏழைக் குடும்பங்களின் பெண்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும்.

Scroll to load tweet…

சமீபத்தில், பெங்களூருவில் உள்ள பொது அஞ்சலகம், மத்தியில் இந்தியா பிளாக் ஆட்சிக்கு வந்தால், தங்கள் கணக்குகளில் மாதந்தோறும் ரூ.8,500 டெபாசிட் செய்யப்படும் என்று எதிர்பார்த்து, பல பெண்கள் கணக்குகளைத் தொடங்க விரைந்தனர். கருத்துக் கணிப்புகளை மீறி இந்திய அணி 234 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், என்டிஏ அடுத்த அரசாங்கத்தை அமைக்கத் தயாராக உள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையான 272 இடங்களைத் தாண்டியது. இந்த நிலையில் பெண்கள் ரூ.1 லட்சம் தர வேண்டும் என்று குவிந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கி உள்ளது.

9 முறை அதிமுக தோல்வி.. ரத்தக்கண்ணீர் வடிக்கும் அதிமுக தொண்டர்கள்.! EPS-க்கு அதிர்ச்சி கொடுத்த கே.சி பழனிச்சாமி