லோக்சபா தேர்தல் 2024 அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்றும், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் என்றும், ஜூன் 4 ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்என்றும் தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கான காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரும் பணிகளை பொறுப்பேற்றவுடன், லோக்சபா மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான நிகழ்ச்சிகள், மார்ச் 16ம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

2019ஆம் ஆண்டைப் போலவே 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று நம்பப்படுகிறது. இந்த காலகட்டத்தில், முதல் கட்டமாக மேற்கு உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படலாம். இந்த முறை டெல்லியில் மூன்றாவது அல்லது நான்காவது கட்டமாக தேர்தல் நடைபெறலாம்.

2019 ஆம் ஆண்டு டெல்லியில் ஆறாவது கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதனிடையே, தேர்தல் ஆணையர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமார் மற்றும் சுக்வீர் சிங் சந்து ஆகியோர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர். இதையடுத்து, தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளில் இரு அதிகாரிகளும் ஈடுபட்டனர். அதன்பிறகுதான் தேர்தல் அட்டவணையை மார்ச் 16-ம் தேதி அறிவிப்பதாகவும் ஆணையம் அறிவித்தது.

Scroll to load tweet…

இதனுடன், சில மாநிலங்களின் சட்டசபை தேர்தல் அட்டவணையை அறிவிப்பது குறித்தும் ஆணையம் தகவல் அளித்துள்ளது. இதில், ஒடிசா, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்தும் ஊகங்கள் எழுந்துள்ளன. 

Scroll to load tweet…

பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கு தேர்தலை பின்னர் நடத்தலாம். எப்படியும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு செப்டம்பர் மாதம் வரை உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 2019ல் லோக்சபா உட்பட நான்கு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் மார்ச் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது.இதனால், இத்தேர்தல்கள் மார்ச் 10ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்ற யூகம் நிலவியது.

2024 லோக்சபா தேர்தல் பல விஷயங்களில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில், இம்முறை நானூறு தாண்டும் இலக்குடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி களம் இறங்கியிருக்கும் நிலையில், இந்தியா தனது முந்தைய நிலையைத் தக்க வைத்துக் கொண்டு முன்னேறும் சவாலை எதிர்கொள்கிறது. 2019ஆம் ஆண்டைப் போலவே 2024ஆம் ஆண்டும் தேர்தல் களத்தில் ஒரு பக்கம் பிரதமர் மோடியும், மறுபுறம் ராகுல் காந்தியும் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தல் தேதிக்கான அட்டவணையை வெளியிட்டனர். அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்றும், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் என்றும், ஜூன் 4 ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்என்றும் தெரிவித்துள்ளது.

இவிஎம் மெஷின் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? முடியாதா? ஓர் அலசல்!