Asianet News TamilAsianet News Tamil

மின்னல் தாக்கி ஒரே நாளில்18 பேர் பலி : எப்படி பாதுகாப்பாக இருப்பது?

மழை பெய்யும் போது,  கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் விவசாய நிலங்களுக்கு செல்வதையோ, மரங்கள், மின்கம்பங்கள் அல்லது தற்காலிக வீடுகளுக்கு அடியில் நிற்பதையோ தவிர்க்குமாறு பேரிடர் மேலாண்மை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Lightning Strikes Kill 18 People In Bihar; Know How To Be Safe
Author
First Published Jul 15, 2023, 2:23 PM IST

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நாட்டின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. அந்த வகையில் பீகாரிலும் கனமழை பெய்து வருகிறது. பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ரோஹ்தாஸ் மாவட்டத்தில் 5 பேர், அர்வால் மாவட்டத்தில் 4 பேர், சரண் மாவட்டத்தில் 3 பேர்; அவுரங்காபாத் மற்றும் கிழக்கு சம்பாரன் மாவட்டங்களில் தலா 2 பேர் மற்றும் பங்கா மற்றும் வைஷாலி மாவட்டத்தில் தலா ஒருவர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

மழை பெய்யும் போது,  கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் விவசாய நிலங்களுக்கு செல்வதையோ, மரங்கள், மின்கம்பங்கள் அல்லது தற்காலிக வீடுகளுக்கு அடியில் நிற்பதையோ தவிர்க்குமாறு பேரிடர் மேலாண்மை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் மழையின் போது ஜன்னல்களில் இருந்து விலகி இருக்கவும், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் ஏசி போன்ற மின் சாதனங்களைத் தொட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எப்படி பாதுகாப்பாக இருப்பது?

பாதுகாப்பான இடம் : நீங்கள் வெளியில் இருக்கும்போது இடி சத்தம் கேட்டாலோ அல்லது மின்னலைக் கண்டாலோ, உடனடியாக ஒரு கட்டிடத்திலோ அல்லது முழுமையாக மூடப்பட்ட உலோகத்தால் ஆன வாகனத்திலோ தஞ்சம் அடையுங்கள். திறந்த கட்டமைப்புகள், கொட்டகைகள், சுற்றுலா தங்குமிடங்கள் அல்லது கூடாரங்கள் போன்றவற்றை தவிர்க்கவும்.
இப்போது பிரபலமாகிறது

வீட்டுக்குள்ளேயே இருங்கள்: இடியுடன் கூடிய மழையின் போது உறுதியான கட்டிடத்தில் தங்கவும். புயலின் போது கம்பிகள் மற்றும் குழாய்கள் வழியாக மின்னல் பயணிக்கும் என்பதால் தொலைபேசிகள், மின் சாதனங்கள் மற்றும் பிளம்பிங் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

ஜன்னல்கள் மற்றும் கதவுகளிலிருந்து விலகி இருங்கள்: இடியுடன் கூடிய மழையின் போது ஜன்னல்கள், கதவுகள் அல்லது உள் முற்றம் அருகே நிற்பதைத் தவிர்க்கவும். மின்னல் உலோக சட்டங்கள் மற்றும் கடத்தும் மேற்பரப்புகள் வழியாக பயணிக்க முடியும்.

திறந்த பகுதிகளைத் தவிர்க்கவும்: புயலின் போது நீங்கள் வெளியில் இருந்தால், திறந்த வெளிகள், மலையுச்சிகள், உயரமான பகுதிகள் மற்றும் மரங்கள், கம்பங்கள் அல்லது கோபுரங்கள் போன்ற உயரமான தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து விலகி இருங்கள். 

மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம்: இடியுடன் கூடிய மழையின் போது மரத்தின் கீழ் நிற்பது ஆபத்தானது. மின்னல் மரத்தைத் தாக்கினால், அது தண்டு வழியாகச் சென்று உங்களை அடையும். வாகனத்திலோ அல்லது கணிசமான கட்டிடத்திலோ இருப்பது பாதுகாப்பானது.

தகவலறிந்து இருங்கள்: வெளிப்புற நடவடிக்கைகளைத் திட்டமிடும் முன் வானிலை முன்னறிவிப்புகள், மின்னல் எச்சரிக்கைகளை தெரிந்திருக்க வேண்டும். இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்பட்டால், வெளியே செல்வதை தவ்ரிக்கவும்.

மின்னல் பாதுகாப்பு பற்றி குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்: மின்னலின் ஆபத்துகள் குறித்து குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். அவர்கள் இடியைக் கேட்டாலோ அல்லது மின்னலைப் பார்த்தாலோ உடனடியாக புகலிடம் தேட கற்றுக்கொடுங்கள். புயலின் போது மின்சாதனங்கள் மற்றும் திறந்த பகுதிகளில் இருந்து விலகி இருப்பதன் முக்கியத்துவத்தை குழந்தைகள் புரிந்து கொள்வதை உறுதி செய்யவும்.

பிரான்ஸ் பயணம் முடித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றார் பிரதமர் மோடி!!

Follow Us:
Download App:
  • android
  • ios