கர்நாடக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடலை மிட்டாய் வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக வாழைப்பழம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கடலை மிட்டாய் வழங்குவதை உடனடியாக நிறுத்திவிட்டு, முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் மட்டும் வழங்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது, முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது. ஆனால், கடலை மிட்டாயில் அதிக அளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளது. மேலும் அதைச் சரியாக சேமிக்கப்படாவிட்டால், அது உட்கொள்ள முடியாததாக மாறிவிடும். அதைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆரோக்கிய அபாயங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, கலபுரகியின் கூடுதல் ஆணையர், கடலை மிட்டாய்க்கு பதிலாக வாழைப்பழங்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்று மாநில கல்வித்துறையிடம் வலியுறுத்தினார். இதேபோன்ற கோரிக்கைகள் மற்ற மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ளன.

இந்த காரணத்திற்காக, மாநிலத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முட்டை அல்லது வாழைப்பழங்களை கூடுதல் ஊட்டச்சத்து உணவாக விநியோகிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கடலை மிட்டாய் விநியோகம் நிறுத்தப்படும்.

இந்த முடிவு தொடர்பாக துறை சார்பில் தனிப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். கல்வித்துறை ஆணையர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.