Asianet News TamilAsianet News Tamil

முதல்வருக்கு அஞ்சலி - ஜனாதிபதி சென்னை புறப்பட்டார்

jayalalitha passed-away-ksx2rq
Author
First Published Dec 6, 2016, 12:01 PM IST


கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், நேற்று இரவு 11.,30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில¢ உள்ளராஜாஜி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

jayalalitha passed-away-ksx2rq

இதையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்தில், ராஜாஜி அரங்குக்கு வர உள்ளார்.

jayalalitha passed-away-ksx2rq

இவரை தொடர்ந்து ஜனாதிபரி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீதுஅன்சாரி மற்றும் 20 மாநில முதலமைச்சர்கள் வர உள்ளனர். இதில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios