ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா..?? காந்தி தேசத்துக்கு நேர்ந்த அவமானம்..!!
குறிப்பாக வடகிழக்கு இந்தியாவுக்கு சொல்வதென்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது .
இந்தியாவிற்கு செல்லும்போது மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என ஆஸ்திரேலியா தன் நாட்டு குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது . சட்டப்பிரிவு 370 ரத்து புதிய திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் என அடுத்தடுத்து இந்தியாவில் போராட்டங்களும் வன்முறைகளும் தலைவிரித்தாடுவதால் அயல்நாடுகள் தங்களது குடிமக்களுக்கு இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன .
குறிப்பாக பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் , ஈரான் , ஈராக் , போன்ற நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக வருபவர்களுக்கு அந்தந்த நாடுகள் இதுபோன்ற எச்சரிக்கைகளை விடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. தற்போது இந்தியாவுக்கும் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது . இந்தியாவின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும்நிலையில் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா , பிரிட்டன் , சிங்கப்பூர் , கனடா , மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவித்துள்ளது . குறிப்பாக வடகிழக்கு இந்தியாவுக்கு சொல்வதென்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது .
இந்நிலையில் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் பல பகுதிகளில் போராட்டங்களும் வன்முறைகளும் நடந்து வருகிறது . இதனால் இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால் முடிந்தவரை இந்தியாவிற்கு செல்வதை தவிருங்கள் என்றும், இந்த எச்சரிக்கையினை மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது . அப்படியும் மீறி செல்வதென்றால் அசாமை ஒட்டியுள்ள நாகலாந்து மணிப்பூர் , சட்டிஸ்கர் மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு செல்ல வேண்டாம் என ஆஸ்திரேலியா தன் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது .