Asianet News TamilAsianet News Tamil

எல்லையை தாண்டினால் உடலில் உயிர் இருக்காது..!! பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் எச்சரிக்கை..!!

இந்திய எல்லைக்கோட்டில் உயிரிழந்த அவர்களின் உடல்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் வெள்ளைக்கொடியேந்தியபடி வந்து  கயிறிகட்டி இழுத்து சென்றனர். 

indian foreign affair ministry warning to pakistan regarding border crossing
Author
Delhi, First Published Sep 16, 2019, 11:15 AM IST

இந்திய எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 10 ஆம் தேதி நடந்த அஜ்பூர் சம்பவமே இதற்கு சாட்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

indian foreign affair ministry warning to pakistan regarding border crossing

காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து, இந்திய எல்லையில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது, இந்தியாவை பழிதீர்க்கும் நோக்கில்  இரவு பகல் பாராமல் இந்திய இராணுவ துருப்புகள் மீது பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துவதும். எல்லைக்குள் நுழைந்து இந்தியாவை ரத்தக்களரி ஆக்கியே தீரவேண்டும் என  தீவிரவாதிகள் மறு பக்கம் துடிப்பதும்தான் இதற்கு காரணம். இப்படி, பாகிஸ்தான் இராணுவத்தின் அத்துமீறல்கள் ஒருபக்கம்,   தீவிரவாதிகளின் ஊடுருவல்கள் மறுபக்கம் என எல்லையில் கண்கொத்தி பாம்பாக இருந்து நாட்டை காத்து வருகிறது இந்திய ராணுவம். 

indian foreign affair ministry warning to pakistan regarding border crossing

நாட்டை காக்கும் இந்த போராட்டத்தில் இந்திய வீரர்கள் பலர் தங்களின் இன்னுயிர்களை ஈந்துவருகின்றனர். அதே நேரத்தில் எதிரிநாட்டு படைக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து பாடம் புகட்டிவருகிறது.  இருந்தாலும் பாகிஸ்தானின் அத்துமீறல்கள், சண்டித்தனங்கள்  ஓய்ந்தபாடில்லை. இந் நிலையில் கடந்த 10 தேதி  எல்லைக்கோட்டுப்பகுதியில் திடீரென ஊடுருவ முயன்ற  இரண்டு பாகிஸ்தான் இராணுவ வீரர்களை இந்திய இராணவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.இந்திய எல்லைக்கோட்டில் உயிரிழந்த அவர்களின் உடல்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் வெள்ளைக்கொடியேந்தியபடி வந்து  கயிறிகட்டி இழுத்து சென்றனர். 

indian foreign affair ministry warning to pakistan regarding border crossing

இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தினரை இந்திய இராணுவம் அநியாயமாக சுட்டுக்கொன்றுவிட்டது என கூப்பாடு போட்டது பாகிஸ்தான்.  அதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது, அதில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பேர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவே ஒப்பந்தத்தை கடைபிடித்து எல்லையில் அமைதியை நிலைநாட்டுமாறு பாகிஸ்தானிடம் இந்தியா பல முறை வலியுறுத்திவருகிறது.

indian foreign affair ministry warning to pakistan regarding border crossing

ஆனால் அந்த ஒப்பந்தங்களை எல்லாம் மீறி  இதுவரை இந்தியாவின் மீது 2000க்கும் அதிகமான முறை  பாக் தாக்குதல் நடத்தி உள்ளது. என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இதுவரை பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்களால்  21 இந்திய இராணுவ வீரர்கள்  உயிரிழந்துள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எல்லை பகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே இந்தியா ஈடுபடுவதாக வெளியுறவுத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios