சீனாவில் நடைபெற்ற வணிகக் கூட்டத்தில் இந்திய துணைத் தூதர் பிரதிக் மாத்தூர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி,முதலீட்டு வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார். இந்தியப் பொருளாதாரம், உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக் திகழ்கிறது.

இந்திய துணைத் தூதர் பிரதிக் மாத்தூர் சீனாவில் ஷாங்காயில் நடைபெற்ற வருடாந்த் துணைத்தூதுவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEOs) வணிக கூட்டத்தில் பங்கேற்று, இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசினார். அப்போது இந்தியாவில் பெருகி வரும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.உலகின் நான்காவது மிகப்பெரிய மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் G-20 பொருளாதாரமான இந்தியாவின் வளர்ச்சி நடைமுறைகளில், உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்க விருப்பம் தெரிவித்தனர்.

"வேகமெடுக்கும் இந்தியாவின் வளர்ச்சி"

கூட்டத்தில் பேசிய பிரதிக் மாத்தூர், உலகின் மிகப் பெரிய மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் ஜனநாயக நாடான இந்தியா, கல்வியறிவு மற்றும் நுகர்வு ஆர்வம் கொண்ட நடுத்தர வர்க்க மக்களுடன் கூடிய ஒரு பெரும் சந்தையாக திகழ்கிறது என குறிப்பிட்டார். தற்போது 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் இந்தியாவின் பொருளாதாரம், 2047க்குள் 30 டிரில்லியன் டாலர்கள் அளவிற்கு வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இளைய தலைமுறையின் ஆதிக்கமும் ஒரு பெரும் நன்மையாக அமைந்துள்ளதாகவும் மாத்தூர் தெரிவித்தார்.

"ஜப்பானை முந்திவிட்டோம், அடுத்தது ஜெர்மனிதான்"

சில நாட்களாக இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என் குறிப்பிட்ட அவர், தற்போது ஜெர்மனியை முந்தி மூன்றாவது இடத்தை அடைவதற்கும் இந்தியா தயாராகி வருகிறது என தெரிவித்தார். 2014-ல் இந்திய அரசால் துவக்கப்பட்ட "Make in India" திட்டம், இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கத்தில் பரிந்துரைக்கப்பட்ட concessional loans, வரிவிலக்கு, மற்றும் தயாரிப்பு தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டங்கள் (PLI) ஆகிவற்றை கொண்டுள்ளதே இந்த வேகமான வளர்ச்சிக்கான காரணம் என கூறினார்.

"உற்பத்தியும் ஏற்றுமதி உயர்வு"

2020-ல் கொரோனா கால சப்ளை சிக்கல்களை எதிர்கொண்டு "Atma Nirbhar Bharat" திட்டம் துவக்கப்பட்டதாகவும் 14 துறைகளில், ₹1.97 லட்சம் கோடி (US$26 பில்லியன்) முதலீட்டுடன் இந்தியாவின் உற்பத்தி திறனையும் ஏற்றுமதிகளையும் மேம்படுத்த இந்த திட்டம் உருவாக்கப்பட்டது எனவும் பிரதிக் மாத்தூர் தெரிவித்தார்.மொபைல் உற்பத்தி, மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள், ஆட்டோமொபைல்கள் மற்றும் பாகங்கள்,ஸ்டீல், தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க் பொருட்கள், உணவுப் பொருட்கள், Solar PV, Battery cells, Drone மற்றும் அதன் பாகங்கள் ஆகியவை உற்பத்தி மற்றும் விற்பை செய்யும் சந்தையாக இந்தியா உள்ளதாகவும் அவர் கூறினார்.

"உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் இந்தியா"

இந்தியா தற்போது சீனாவைத் தவிர உலகில் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக உள்ளதாகும் Foxconn போன்ற நிறுவனங்கள் iPhone உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்தியா உலக மருந்துத் துறையில் "Pharmacy of the World" என அழைக்கப்படுகிறது என்பதையும் பிரதிக் மாத்தூர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் நிலையான துறைகள் மற்றும் புதிய வளர்ச்சித்துறைகள் இரண்டிலும் வாய்ப்புகள் நிறைந்து உள்ளதாகவும் தொழில்துறை புரட்சிகள் நாடுகளுக்கு உலகமயமாக்கப்பட்ட தலைமையை வழங்கும் எனவும் பிரதிக் மாத்தூர் தெரிவித்தார்.

"AI இல் இந்தியா தான் கிங்கு"

இந்தியா வணிகத்திறனில் சாதனை படைத்து – World Bank's Ease of Doing Business அடிப்படையில் 80 இடங்கள் மேம்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், Insolvency code, RERA, GST போன்ற சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் FDI வருகைகள் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். இந்தியா IT வல்லுநரான நாடாக Industrial Revolution 4.0 மற்றும் AI வளர்ச்சியில் முன்னிலை வகிக்கிறது என்றும் இந்திய அரசும், தனியார் நிறுவனங்களும் சேர்ந்தே AI மற்றும் Semi-Conductor திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இந்திய துணை தூதர் பிரதிக் மாத்தூர் மகிழ்ச்சி தெரிவித்தார்.