Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 18,313 பேருக்கு கொரோனா.. 41 பேர் பலி

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

India corona case today - 18,313 case positive last 24hrs
Author
India, First Published Jul 27, 2022, 12:49 PM IST

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,313 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 16,866 ஆகவும் நேற்று 14,830 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 18,313 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,38,764 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 20,742 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,32,67,571 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,45,026 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 57 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:தமிழகத்தின் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா… சென்னையில் குறைந்தது தினசரி பாதிப்பு!!

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,26,167 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.20 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.33 % ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.47 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 202.79 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 27,37,235 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 16,886 பேருக்கு கொரோனா.. இன்றைய பாதிப்பு நிலவரம்

Follow Us:
Download App:
  • android
  • ios