டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மூன்று முறை ஆஜராகாத நிலையில் 4வது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனவரி 18 முதல் 20ஆம் தேதிக்குள் மக்களவை தொடர்பான பணிகளுக்காக கோவா செல்வார் என்று இந்த வார தொடக்கத்தில், எதிர்க்கட்சியான இந்திய அணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. கலால் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்க இயக்குனரகம் சனிக்கிழமை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்நிலையில் நான்காவது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி 18ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இது டெல்லி அரசியலில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.

வெறும் ரூ.55 ஆயிரத்தில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. லைசென்ஸ் தேவையில்லை.. உடனே முந்துங்க..

இந்த வார தொடக்கத்தில், எதிர்க்கட்சியான இந்திய அணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, ஜனவரி 18 முதல் 20 வரை மக்களவை தொடர்பான கட்சிப் பணிகளுக்காக கெஜ்ரிவால் கோவா செல்வார் என்று அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மணீஷ் சிசோடியா சிறையில் இருக்கும் நிலையில், இந்த சம்மன் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

மாலத்தீவை விடுங்க பாஸ்.. நம்ம அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! டிக்கெட் விலை கம்மிதான்!!