பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜ்யசபாவில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார்.

ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் பிரிவினைவாதங்களை வளர்ப்பதாக குற்றம் சாட்டினார். ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தி, அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அவர் வலியுறுத்தினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேசம் என்பது நமக்கு வெறும் நிலம் மட்டுமல்ல. நம் அனைவருக்கும் பொதுவானது. நாடு முழுவதும் சமச்சீர் வளர்ச்சியின் முக்கியத்துவம் இன்றியமையாதது. ஒரு பிராந்தியம் முன்னேற்றத்தில் பின்தங்கியிருந்தால், அது முழு நாட்டையும் பாதிக்கும் என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார் பிரதமர் மோடி. சில அரசியல் அமைப்புகளால் பயன்படுத்தப்படும் பிளவுபடுத்தும் வார்த்தைகள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, நாட்டின் எதிர்காலத்திற்கு அதன் ஆபத்து குறித்து எச்சரித்தார். 

Scroll to load tweet…

“எங்கள் வரி, எங்கள் பணம்! எந்த மொழி பயன்படுத்தப்படுகிறது?” இது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் உரை, நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்கு ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் பொறுப்பான நிர்வாகத்தின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

குறைந்த விலையில் அயோத்தி செல்ல அருமையான வாய்ப்பு.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா..