உத்தரப் பிரதேச மாநில சிறைகளில் இனி காலை வேளைகளில் மன அமைதி கொடுக்கும் 'மகா மிருத்யுஞ்சய் மந்திரம்' மற்றும் 'காயத்ரி மந்திரம்' இசைக்கப்படும் என்று அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தரம்வீர் பிரஜாபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் கைதிகளிடம் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில சிறைகளில் இனி காலை வேளைகளில் மன அமைதி கொடுக்கும் 'மகா மிருத்யுஞ்சய் மந்திரம்' மற்றும் 'காயத்ரி மந்திரம்' இசைக்கப்படும் என்று அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தரம்வீர் பிரஜாபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் கைதிகளிடம் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக உத்தரப்பிரதேச சிறைத்துறை அமைச்சர் தரம்வீர் பிரஜாபதி அளித்துள்ள பேட்டியில், சிறைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும்பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மாற்று வழிகளைத் தேடுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.
மேலும், நீதிமன்ற அபராதம் செலுத்தாததால் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் 135 பேரையும் பாஜக நிறுவன தினத்தன்று சமூக சேவகர்களால் திரட்டப்பட்ட நிதியை பயன்படுத்தி விடுதலை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்றும் மாநிலத்தில் உள்ள பல சிறைகளில் இருந்து இது போன்று உள்ள கைதிகளை விடுவிக்கவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
மேலும் சிறைத்துறைக்கு எதிரான புகார்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கலைத்துறையில் ஆர்வமாக இருக்கும் கைதிகள் பட்டியலை சிறை அதிகாரிகளிடம் கேட்டிருப்பதாகவும் அவர்களுக்கு சிறைத்துறை சார்பாக கூடுதல் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவுள்ளதாகவும் கூறிய அமைச்சர், ஓவியக்கலையில் சிறந்து விளங்கும் கைதிகள் மூலம், சிறையில் ஓவியங்கள் வரையப்படும் என்றார்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில சிறைகளில் இனி காலையில் 'மகா மிருத்யுஞ்சய் மந்திரம்' மற்றும் 'காயத்ரி மந்திரம்' ஒலிப்பதிவுகளை இசைக்கும்படி அனைத்து சிறை நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.சிறைகளில் மந்திரங்களை இசைப்பதன் மூலம் கைதிகளுக்கு மன அமைதி கிடைக்கும் என்றும், இந்த மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் சிறைகளின் சுற்றுச்சூழல் மேம்படுவதுடன், குற்றவாளிகளின் மன பதற்றம் தணியும் என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதனால் குற்றவாளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களாக சிறையில் இருந்து வெளியேற உதவும் என்றும் அவர் கூறினார். கைதிகளுக்கு நேர்மறை சிந்தனைகளை விதைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
