போர் பதற்றம் அதிகரித்து வருவதால் சுகன்யான் திட்டத்தின் விண்வெளி வீரர் அஜித் கிருஷ்ணன் மீண்டும் இந்திய விமானப்படைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Astronaut Ajith Krishnan Recalled to IAF: பாகிஸ்தானுடனான எல்லையில் பதற்றம் அதிகரித்து வருவதால், ககன்யான் திட்டத்துக்கான விண்வெளி வீரர் அஜித் கிருஷ்ணனை தனது பிரிவில் சேர இந்திய விமானப்படை திரும்ப அழைத்துள்ளது. இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யானுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய விமானப்படை அதிகாரிகளில் ஒருவரான குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்து வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் இந்தியா விமானப்படைஅவரை அவசரமாக திரும்ப அழைத்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விமானப்படைக்கு திரும்பும் அஜித் கிருஷ்ணன்

டெல்லியில் நடந்த உலகளாவிய விண்வெளி ஆய்வு மாநாட்டில் அஜித் கிருஷ்ணன் கலந்து கொண்டிருந்தபோது, ​​தனது பதவிக்குத் திரும்ப உத்தரவுகளைப் பெற்றார். "தற்போதைய சூழ்நிலை காரணமாக, ஐஏஎஃப் என்னைத் திரும்ப அழைத்துள்ளது" என்று அவர் தி பிரிண்ட் பத்திரிகையிடம் பேசியுள்ளார். கொடிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையைத் தாண்டி பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்தியா துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர் அதிகரித்த பாதுகாப்பு சூழ்நிலையை அவர் குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டம் 

தேசிய பாதுகாப்பைப் பாதுகாத்தல் மற்றும் விண்வெளியில் அதன் லட்சியங்களை முன்னேற்றுதல் ஆகிய இரண்டு முக்கியமான முனைகளை இந்தியா சமநிலைப்படுத்தும் நேரத்தில் அஜித் கிருஷ்ணனின் திரும்பப் பெறுதல் வந்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை 2027ம் ஆண்டு செயல்பட்ட இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ககன்யான் திட்டம், மூன்று பேர் கொண்ட குழுவினரை மூன்று நாட்களுக்கு பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் அனுப்பி பாதுகாப்பாக பூமிக்கு திருப்பி அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் விண்வெளித் திறன்களில் ஒரு பெரிய பாய்ச்சலைக் குறிக்கிறது 

யார் இந்த அஜித் கிருஷ்ணன் 

இந்த திட்டத்தில் நியமிக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களில், கிருஷ்ணன் மற்றும் அங்கத் பிரதாப் தற்போது இந்தியாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மற்ற இருவரான சுபன்ஷு சுக்லா மற்றும் பிரசாந்த் பி நாயர், அமெரிக்காவில் உள்ள ஆக்சியம்-4 பணிக்குத் தயாராகி வருகின்றனர். இது அவர்களின் விண்வெளிப் பயணப் பயிற்சியின் ஒரு பகுதியாக செயல்படும். 2003 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையால் நியமிக்கப்பட்ட அஜித் கிருஷ்ணன், Su-30 MKI மற்றும் MiG-29 போன்ற பல்வேறு போர் விமானங்களில் கிட்டத்தட்ட 2,900 மணிநேரம் பறந்த அனுபவம் வாந்த போர் விமானி ஆவார்.

பெங்களூரு இஸ்ரோவில் பயிற்சி 

விமானப்படையில் அவசரமாக பணியமர்த்தப்பட்ட போதிலும், விண்வெளி வீரர் பயிற்சித் திட்டம் செயலில் உள்ளதாக அஜித் கிருஷ்ணன் கூறினார். இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் சுகன்யான் திட்டத்துக்கான பயிற்சி நடந்து வருகிறது.