அடுத்த மாதம் ஜி 20 மாநாடு நடைபெற உள்ள பாரத மண்டபத்தில் 30 அடி உயரமுள்ள பிரம்மாண்ட நடராஜர் சிலை வைக்கப்பட உள்ளது.

டெல்லியில் செப்டம்பர் மாதம் 18வதுஜி20 உச்சிமாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறதுஇந்தஉச்சிமாநாட்டில்அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரேசில், ஆஸ்திரேலியாமற்றும்ரஷ்யாபோன்றநாடுகளின்தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.செப்டம்பர் 9-10 தேதிகளில்நடைபெறும்ஜி20 உச்சிமாநாட்டின்சர்வதேசகண்காட்சிமற்றும்மாநாட்டுமையத்தின் (IECC) புதிதாககட்டப்பட்ட பாரத மண்டபம் என்ற இந்தியாவின் மிகப்பெரிய அரங்கை பிரதமர்நரேந்திரமோடிசமீபத்தில்திறந்துவைத்தார்.

அமெரிக்கஅதிபர்ஜோபிடன், சீனஅதிபர்ஜிஜின்பிங், ரஷ்யஅதிபர்விளாடிமிர்புடின் மற்றும் ஜி20 உறுப்பு நாடுகளின்தலைவர்கள்பங்கேற்கும்ஜி20 மாநாட்டைஇந்தியாநடத்துவதுஇதுவேமுதல்முறை. பங்களாதேஷ், ஐக்கியஅரபுஎமிரேட்ஸ், எகிப்து, சிங்கப்பூர்போன்ற 10 நாடுகளின்தலைவர்களையும்இந்தியாஅழைப்பாளராகஅழைத்துள்ளதுடெல்லியில் உள்ள பழையபிரகதிமைதானத்தில் 123 ஏக்கர்பரப்பளவில் 2,700 கோடிரூபாய்செலவில்கட்டப்பட்ட, இந்த பாரத மண்டபத்தில் ஜி 20 உச்சிமாநாடுநடைபெறும்

INS Vindhyagiri : ப்ராஜெக்ட் 17A.. அதிநவீன போர்க்கப்பல்.. அறிமுகம் செய்த ஜனாதிபதி திரௌபதி முர்மு - முழு விவரம்

இந்த நிலையில், அடுத்த மாதம் ஜி 20 மாநாடு நடைபெற உள்ள பாரத மண்டபத்தில் 30 அடி உயரமுள்ள பிரம்மாண்ட நடராஜர் சிலை வைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தான் இந்த சிலை கொண்டு செல்லப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு. இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலை அஷ்டதாதுக்களால் செய்யப்பட்டதாகவும், இது ஒருபோதும் சேதமடையாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாரத மண்டபம் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தினுள் அமைந்துள்ள நகரும் சுவர்களை பயன்படுத்தி, 3 தனித்தனி அரங்குகளாகவும் மாற்றி அமைக்கலாம். ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள 5500 பேர் அமரக்கூடிய புகழ்பெற்ற சிட்னி ஓபரா ஹவுஸை விட இந்த பாரத மண்டபம் பெரியது. இதில் ஒரே நேரத்தில் 7000 பேர் அமரலாம். இங்கு சுமார் 5500 வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டை நடத்த இந்தியா தலைமை தாங்கி உள்ள நிலையில், நாட்டின் பெருமையை உலக நாடுகள் உணர இந்த பாரத மண்டபமே போதும் என்ற வகையில் பாரத மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.