Asianet News TamilAsianet News Tamil

சிங்கப்பெண்ணே..வீரமங்கையே.. நெட்டிசன்களின் பாராட்டு மழையில் டிரெண்டாகும் பெண்..

நள்ளிரவு ஒரு மணியளவில் தன்னுடைய சகோதரனின் திருமண விழாவில் எஞ்சிய உணவை திருமண உடையிலே நடைமேடைகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வழங்கிய மணமகனின் சகோதரியின் செயல் தற்போது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

Food provide to poverty people
Author
India, First Published Dec 6, 2021, 10:07 PM IST

தன்னை பெற்றெடுத்த தாய், தந்தையர்களை கூட வயதாகும் போது சரிவர உணவு வழங்கி பாரமரிக்க தயங்கும் இக்காலத்தில் இந்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் தான் மேற்க வங்கத்தில் இரவு நள்ளிரவில் ஒரு பெண் செய்த செயல் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது.

திருமண விழாவில் மிச்சமான உணவை ரயில் நிலையத்தில் வசிக்கும் எழை மக்களுக்கு அந்த பெண்மணி வழங்கியுள்ளார். எந்த வித சிரமமின்றி, நள்ளிரவு என்று கூட சோர்ந்து போகாமல், உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அந்த உணவை வீணடிக்காமல் வழங்கிய அந்த பெண்ணின் மனித நேயத்திற்கு அனைவரும் நன்றி சொல்லி வருகின்றனர். மேலும் எஞ்சிய திருமண உணவை ஆதரவற்றவர்களுக்கு விநியோகிக்கும் இந்த புகைப்படங்கள் உதவும் நல்லெண்ணத்திற்கு எடுத்துக்காட்டாக சமுக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

Food provide to poverty people

மேற்கு வங்கத்தின் ரனாகாட் ஸ்டேஷனில்,  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இரவு 1 மணியளவில் , வரவேற்பில் எஞ்சிய உணவு அதிகளவில் இருப்பதை கண்ட மணமகனின் சகோதரி பாபியா கர் அதனை ஏழைகளுக்கு வழங்கியுள்ளார். அவர் நள்ளிரவு என்று கூட பார்க்காமல், திருமண அலங்கார உடையிலேயே சிறிதும் முகம் சுழிக்காமல் ரயில் நிலையத்தில் வசித்து வரும் மக்களுக்கு உணவுகளை வழங்கினார். 

அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த  திருமண புகைப்படக் கலைஞர் நிலஞ்சன் மோட்டல் என்பவர் இதனை எதேச்சையாக பார்த்து, புகைப்படம் எடுத்து அதனை தங்களது சமூக வலை தளங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது அது வைரலாகி வருகிறது.

Food provide to poverty people

மேலும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வயதான பெண்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை, அறுசுவை உணவைப் பரிமாற அப்பெண்ணின் அருகில் கூடுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம் என்று சொல்லியுள்ளார். மேலும் பெரிய பாத்திரங்களிலிருந்து உணவை எடுத்து  தட்டுக்களில் வைத்து அவரே பரிமாறும் புகைபடங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. பாபியாவின் செயல் சமூக வலைதள பயனர்களின் மனங்களை வென்றுள்ளது. அதனால் அவரது படத்திற்கு லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios