ஜாமீன் நீட்டிப்பை நிராகரித்த நீதிமன்றம்... 112 நாட்களுக்கு பிறகு லாலு சரண்!
கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவரது 112 நாள் பரோல் முடிந்து இன்று ராஞ்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவரது 112 நாள் பரோல் முடிந்து இன்று ராஞ்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
கடந்த 1990-ம் ஆண்டு பீகார் மாநிலத்தின் முதல்வராக இருந்த போது கால்நடை தீவன கொள்முதலுக்காக, மாவட்ட கருவூலங்களில் முறைகேடு நடைபெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்குகளை ஜார்க்கண்ட் மாநில சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. லாலு மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து 4 வழக்குகளில் அவருக்கு 14 ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டது. பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீனில் விடுவித்து ராஞ்சி உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் 11-ம் தேதி உத்தரவிட்டது. அதன்பின்னர் மருத்துவ காரணங்களுக்காக அவரது ஜாமீன் மேலும் நீட்டிக்கப்பட்டது.
மேலும் ஒருமுறை நீட்டிப்பு செய்வதற்காக லாலுவின் வழக்கறிஞர் கடந்த 24-ம் தேதி தாக்கல் செய்த மனுவை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். பிறகு
30-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என ஆணை பிறப்பித்தார். இதையடுத்து இன்று நீதிமன்றத்தில் லாலுபிரசாத் யாதவ் சரணடைந்தார். பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.