குடியரசு தினத்தை ஒட்டி தலைநகர் உட்பட நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றுகிறார்.

குடியரசு தினத்தை ஒட்டி தலைநகர் உட்பட நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றுகிறார்.குடியரசு தின விழா காலை 10.30 மணியளவில் தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு நிறைவடைகிறது. குடியரசு தின பாதுகாப்பு பணியில் 27,000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆயுதம் தாங்கிய போலீஸ் படை வீரர்கள் மற்றும் கமாண்டோக்கள், அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படைகளின் ஜவான்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறிய போது, ‘ குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மற்ற உயரதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களுடன் விழாவைக் கொண்டாடும் இடத்தைப் பாதுகாப்புப் பணியாளர்கள் பருந்து கண்களுடன் கண்காணித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, முகத்தை அடையாளம் காணும் மென்பொருள் மற்றும் டிரோன் எதிர்ப்பு கருவிகள் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன. குடியரசு தின அணிவகுப்பில் 71 டிசிபிகள், 213 ஏசிபிகள், 753 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 27,723 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யுஏவிகள்), பாராகிளைடர்கள் மற்றும் சூடான காற்று பலூன்கள் உள்ளிட்ட துணை மரபுவழி வான்வழி தளங்களை டெல்லியில் இயக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவு ஜனவரி 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது, பிப்ரவரி 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும். வான்வெளி பாதுகாப்பிற்காக எதிர்-டிரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு குடியரசு தின விழாவின் போது, மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் டிராக்டர்களில் நுழைந்தனர். அவர்கள் போலீசாருடன் மோதிக்கொண்டனர். 

இதனை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டைப் போல அல்லாமல் இந்த ஆண்டு டெல்லியின் அனைத்து முக்கிய எல்லைப் புள்ளிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் இல்லாத மற்றும் சுமூகமான குடியரசு தின விழாவை உறுதிசெய்ய உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்று கூறினர்.