திறன் மேம்பாட்டு கழக ஊழலில்ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயு இன்று காலை கைது செய்யப்பட்டார்.

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாப்பு நாயுடு இன்று அதிகாலை நந்தியால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நந்தியால் சரக டிஐஜி ரகுராமி ரெட்டி மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தலைமையிலான போலீஸார், அதிகாலை 3 மணியளவில் நகரத்தில் உள்ள ஆர்.கே. ஃபங்ஷன் ஹாலில் உள்ள சந்திரபாப்பு நாயுடுவின் முகாமுக்குச் சென்றனர். அப்போது அவர் தனது கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எனினும், அங்கு திரண்டிருந்த ஏராளமான தெலுங்கு தேசம் கட்சியினர் காவல்துறையினருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சந்திரபாப்பு நாயுடுவை பாதுகாக்கும் SPG படைகள் கூட, விதிகளின்படி அதிகாலை 5.30 மணி வரை அவரை பார்க்க யாரையும் அனுமதிக்க முடியாது என்று கூறி போலீஸாரை அனுமதிக்கவில்லை.

மும்பையை உலுக்கிய இளம் விமானப் பணிப்பெண் கொலை வழக்கு - கைதான 40 வயது நபர் காவல் நிலையத்தில் மரணம்!

ஒருவழியாக, காலை 6 மணியளவில், போலீசார் சந்திர பாபு நாயுடுவின் வாகனத்தின் கதவுகளைத் தட்டி, அவரை கீழே இறக்கி கைது செய்தனர். ஆந்திர திறன் மேம்பாட்டு கழக ஊழலில் அவர் கைது செய்யப்படுவதாக டிஐஜி அவரிடம் கூறினார், அதில் அவர் நம்பர். 1 குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதற்கான நோட்டீஸ் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல்கட்ட எதிர்ப்பிற்குப் பிறகு, சந்திரபாபு நாயுடு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் விஜயவாடாவுக்கு மாற்றப்பட உள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 50 (1) (2) இன் கீழ் 120(8), 166, 167, 418, 420, 465, 468, 471, 409 உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுவதாக போலீஸார் சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவித்தனர். ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்பதால் ஜாமீனில் விடுவிக்க முடியாது. நீதிமன்றம் மூலம் மட்டுமே ஜாமீன் பெற முடியும்" என்று காவல்துறையினர் வழங்கிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்திரபாபு நாயுடுவின் கைதை தொடர்ந்து, ஆந்திரா முழுவதும் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார், ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகளும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் காலையிலேயே பரபரப்பான சூழல் நிலவுகிறது.