பிகாரில் காதலியை தனிமையில் சந்திப்பதற்காக, கிராமம் முழுவதும் குறிப்பிட்ட நேரத்தில் மின் துண்டிப்பு செய்த எல்க்ட்ரிஷியன் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் காதலியை தனிமையில் சந்திப்பதற்காக, கிராமம் முழுவதும் குறிப்பிட்ட நேரத்தில் மின் துண்டிப்பு செய்த எல்க்ட்ரிஷியன் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களாக நாட்டில் மின்வெட்டு பிரச்னை பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்கள் மின் வெட்டு பிரச்சனையில் சிக்கியுள்ளன. இந்த நிலையில் பிகாரில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. கொளுத்தும் வெயிலில் பலமணி நேர மின்வெட்டை சகித்துக்கொள்ள முடியாமல் பலரும் தவிக்கும் நிலையில், பிகாரிலும் ஒரு கிராமத்தில் மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த மின்வெட்டின் காரணத்தை தெரிஞ்சி மக்கள் கொந்தளித்துவிட்டார்கள்.
பிகார் மாநிலம் கிழக்கு பகுதியிலுள்ள பூர்னியா மாவட்டத்தில் கணேஷ்பூர் என்ற கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. அதுவும் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சுமார் 2 லிருந்து 3 மணி நேரம் வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுவட்டாரத்திலுள்ள பிற கிராமங்களில் மின் வெட்டு பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் கணேஷ்பூர் கிராமத்தில் மட்டும் தினமும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் படிக்க: ஹேர் ஸ்டைல் பன்னுவதாக கூறி தலை முடியை எரித்து விட்டனர்... சலூன் கடை ஊழியர் மீது ராணுவ அதிகாரியின் மனைவி புகார்
இந்நிலையில் பல மாதங்களாக குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மின்வெட்டு தொடர்வதால் சந்தேகமடைந்த மக்கள், அதிகாரிகளிடம் விசாரிக்க தொடங்கியுள்ளனர். அப்போது தெரியவந்த விடயம் தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள எலெக்ட்ரீஷியன் ஒருவர் தன் காதலியை இருட்டில் சந்திக்கப்பதற்காகச் கிராமம் முழுக்க கரன்ட் கட் செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அந்த எலெக்ட்ரீஷியனையும் அவரது காதலியையும் திட்டுமிட்டு கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். எலெக்ட்ரீஷியனை கிராம மக்கள் சரிமாரியாக அடித்து, மொட்டையடித்து தெருக்களில் நடக்கவிட்டுள்ளனர். இறுதியில் இருவருக்கும் கிராம மக்கள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இனி அதிகரிக்கும் மின்வெட்டு..?கையிருப்பு இல்லாத நிலக்கரி..முக்கிய அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
