Asianet News TamilAsianet News Tamil

யெஸ் வங்கியின் நிறுவனர் வீட்டில் ரெய்டு... திவாலுக்கு பிறகு அமலாக்கத்துறை அதிரடி..!

மும்பையை தலைமையிடமாக கொண்டு, கடந்த 2003ம் ஆண்டு நவம்பரில் யெஸ் வங்கி பதிவு செய்து துவக்கப்பட்டது. ரானா கபூர், அசோக் கபூர் ஆகியோர் இதனை துவக்கினர். படிப்படியாக நாடு முழுவதும் கிளைகள் துவக்கப்பட்டன. 2004 ஆகஸ்ட்டில் வங்கியின் முதல் கிளை மும்பையில் செயல்பட துவங்கியது. கடந்த ஆண்டு ஜூன் நிலவரப்படி இந்த வங்கிக்கு 1,122 கிளைகள் உள்ளன. தற்போது இந்த வங்கியில் சுமார் 28.6 லட்சம் சேமிப்பு கணக்குகள் உள்ளன. பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கடன்களை இந்த வங்கி தாராளமாக வாரி வழங்கியது. இவற்றை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், வங்கியின் வராக்கடன் அதிகரித்தது

ED raids Yes Bank founder Rana Kapoor
Author
Mumbai, First Published Mar 7, 2020, 6:04 PM IST

ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து மும்பையில் உள்ள யெஸ் வங்கியின் நிறுவனர் வீட்டில் அதிரடி சோதனையை அடுத்து அவரிடம்  அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பையை தலைமையிடமாக கொண்டு, கடந்த 2003ம் ஆண்டு நவம்பரில் யெஸ் வங்கி பதிவு செய்து துவக்கப்பட்டது. ரானா கபூர், அசோக் கபூர் ஆகியோர் இதனை துவக்கினர். படிப்படியாக நாடு முழுவதும் கிளைகள் துவக்கப்பட்டன. 2004 ஆகஸ்ட்டில் வங்கியின் முதல் கிளை மும்பையில் செயல்பட துவங்கியது. கடந்த ஆண்டு ஜூன் நிலவரப்படி இந்த வங்கிக்கு 1,122 கிளைகள் உள்ளன. தற்போது இந்த வங்கியில் சுமார் 28.6 லட்சம் சேமிப்பு கணக்குகள் உள்ளன. பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கடன்களை இந்த வங்கி தாராளமாக வாரி வழங்கியது. இவற்றை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், வங்கியின் வராக்கடன் அதிகரித்தது. 

ED raids Yes Bank founder Rana Kapoor

யெஸ் வங்கி தற்போது கடும்நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதன் நிதி மூலதனத்தை ஆர்பிஐ நிர்ணயித்த வரம்புக்குள் கொண்டுவர கடும் முயற்சியில் இறங்கி இருந்தது. மூலதனத்தை உயர்த்த ரூ.14,000 கோடி நிதி திரட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவில் முதலீடு வராத நிலையில் அந்த இலக்கை ரூ.10,000 கோடியாக குறைத்தது.

ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்குமேல் கடன் அளித்துள்ளது. இவற்றில் சில நிறுவனங்கள் திவால் நிலையில் உள்ளன. இதனால் யெஸ் வங்கியின் வாராக் கடன் கடுமையாக உயர்ந்தது.

ED raids Yes Bank founder Rana Kapoor

தற்போது யெஸ் வங்கியின் கடன் சுமை ரூ.14,700 கோடியாக உள்ளது. இது வங்கியின் சொத்து மதிப்பில் 54.5% ஆகும். மேலும் யெஸ் வங்கியை காக்கும் பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் எடுத்து வருகின்றன. அதன்படி, வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரையில் வங்கியிலிருந்து அதிகபட்சமாக பணம் எடுக்கலாம். மார்ச் 5-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதிவரை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் எஸ் வங்கி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.

இந்நிலையில். யெஸ் வங்கியில் நடந்த பல மோசடிகள் தொடர்பாக அதன் நிறுவனர் ராணா கபூரிடம் விசாரணை தொடங்கியுள்ளது. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று அவரை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios