ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து ஆளில்லா விமானங்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களால் பல பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் பரவலாகக் காணப்படுவதால் பாதுகாப்பு அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர். தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதால் எல்லைக் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பிற்காக சைரன் ஒலிக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தச் சூழ்நிலையில் இந்திய ராணுவம் உடனடியாகச் செயல்பட்டு, ஆளில்லா விமானங்கள் குறித்த தகவல்களை ரேடார்கள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளது. சமீப காலமாக ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயற்சிப்பது அதிகரித்துள்ளது.

Scroll to load tweet…

ராஜோரி, பூஞ்ச், குப்வாரா, கதுவா போன்ற முக்கியப் பகுதிகளில் சிறப்புப் படைப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆளில்லா விமானங்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வான்வழி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்கள் இந்தியாவில் ஊடுருவ முயற்சிப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்

ஜம்மு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு முதலமைச்சர் உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். "தயவுசெய்து சில மணி நேரங்களுக்கு வீதிகளுக்கு வர வேண்டாம். உங்கள் வீட்டிலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ இருங்கள். வதந்திகளை நம்ப வேண்டாம், உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பகிர வேண்டாம்" என்று அவர் கூறியுள்ளார்.

Scroll to load tweet…