கேரளாவுக்கு போகாதீங்க !! அலறும் அமெரிக்கா...
தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்கூட்டியே கேரளாவில் பெய்யத் தொடங்கியது. கடந்த மாதம் தொடர்நது பெய்த மழையால் கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின.
இந்நிலையில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை மீண்டும் மிரட்டத் தொடங்கியுள்ளது. இந்த முறை மழை சற்று உக்கிரமாக பெய்து வருகிறது. இதையடுத்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்துள்ளது.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமேனோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இடைவிடாதுபெய்துவருவதால், தங்கள்நாட்டுசுற்றுலாப்பயணிகள்கேரளாவுக்குபயணம்மேற்கொள்ளவேண்டாம்என்றுஅமெரிக்காகோரிக்கைவிடுத்துள்ளது.

நிலச்சரிவுமற்றும்வெள்ளத்தால்பாதிக்கப்பட்டபகுதிகளுக்குசெல்வதைமுற்றிலும்அமெரிக்கபயணிகள்தவிர்க்கவேண்டும்என்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
