உத்தரகாண்ட் மாநிலத்தில் பணி புரியும் மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது 2 வயது மகனை தனியார் மழலையர் பள்ளியில் சேர்க்காமல் அரசு அங்கன்வாடியில் சேர்த்து அசத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
உத்தரகண்ட்மாநிலம், சமோலிமாவட்டஆட்சியராக ஸ்வாதி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரதுகணவர், நிதின்பதோரியா, அல்மோராமாவட்டகலெக்டராகஉள்ளார்.இவர்களது மகன் அப்யுத். 2 வயதான மகனை கலெக்டர் ஸ்வாதி கோபேஷ்வர்நகரில்உள்ள, அரசுஅங்கன்வாடிமையத்தில்சேர்த்துள்ளார்.
இதுகுறித்துகருத்து தெரிவித்த ஸ்வாதி, அங்கன்வாடிமையத்தில், அனைத்துவசதிகளும்உள்ளன. மற்றகுழந்தைகளுடன்பேசி, பழகி, ஒன்றாகஅமர்ந்துஉணவருந்தமுடியும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, . எதிர்காலத்தில், பொருளாதாரஏற்றத்தாழ்வின்றி, அனைவருடன்எளிதாகபழகுவதற்கு, இதுஉதவும் என்றும் ஸ்வாதி குறிப்பிட்டார்.. அதிகாரிகள்தங்கள்குழந்தைகளைசேர்ப்பதன்மூலம், அரசுஅங்கன்வாடிமையத்தைபற்றியமக்களின்அணுகுமுறையில்மாற்றத்தைஏற்படுத்தமுடியும் என்றும் ஸ்வாதி தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரே தனது குழந்தையை அரசு மழலையர் பள்ளியில் சேர்த்திருப்பது. அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியிள்ளது. அவரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.
