விசுவாசத்துக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா ? 3 ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த குஜராத் வைர வியாபாரி!!
சூரத்தில் உள்ள வைரம் பட்டை தீட்டும் நிறுவனத்தில் கடந்த 25 ஆணடுகளாக விசுவாசமாக பணியாற்றிய 3 ஊழியர்களுக்கு அந்நிறுவனத்தின் உரிமையாளர் தலா 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார்களை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளார்.
கடந்த 1977-ம் ஆண்டு தனது கிராமத்தில் இருந்து கையில் ரூ.12.5 காசுகளை பஸ் டிக்கெட்டுக்காக எடுத்துக்கொண்டு சூரத் புறப்பட்டார். அதன்பின் கடினமாக உழைத்து, வைரம் பட்டைத் தீட்டும் தொழிலில் இறங்கி இன்று 6 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாகியுள்ளார்.
தோலாகியா நிறுவனத்தில் தற்போது 5,500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் 25 ஆண்டுகள் வேலை செய்த 3 ஊழியர்களுக்கு சவ்ஜி தோலாகியா தலா ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார் பரிசளித்துள்ளார்.
தோலாகியாவுக்கு கார் பரிசளிப்பது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் ஊழியர்களுக்கு வீடுகளைப் பரிசாக அளித்துள்ளார், 1,200 ஊழியர்களுக்கு டாட்சன் காரை பரிசாக வழங்கியுள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை வீரர்களைச் சுழற்சி முறையில், நாடு முழுவதும் ஏ.சி. ரயிலில் சுற்றுலாவும் அழைத்துச் சென்று உற்சாகப்படுத்துகிறார்.
இந்நிலையில், தனது நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலேஷ் ஜடா, மகேஷ் சந்திரபாரா , மகேஷ் சந்திரபாரா ஆகியோரைப் பாராட்டி தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி எஸ்யுவி காரை பரிசாக அளித்துள்ளார்.
இந்த 3 பேரும் நிறுவனம் தொடங்கும் போது சிறுவர்களாக பணிக்குச் சேர்ந்து வேறு எந்த நிறுவனத்துக்கும் மாறாமல் தொடர்ந்து இங்குப் பணி செய்துள்ளனர். பட்டைத் தீட்டுவதில் இருந்து, பாலிஷ் செய்வது வரை அனைத்துப் பணிகளையும் கற்று 3 பேரும் முக்கிய துறைகளுக்கு பொறுப்பாக இருக்கிறார்கள்.
சூரத்தில் இன்று நடந்த எளிமையான நிகழ்ச்சியில் இந்த 3 ஊழியர்களுக்கும் காரின் சாவியை குஜராத் முன்னாள் முதலமைச்சர் ஆனந்திபென் படேல் வழங்கினார்.