Asianet News TamilAsianet News Tamil

வரதட்சணை வாங்குவியா..? அப்ப உனக்கு டிகிரி கிடையாது.. பல்கலைக்கழகம் அதிரடி

திருமணத்தின் போது வரதட்சணை வாங்க மாட்டேன் என்று ப்ராமிஸ் செய்து உறுதி மொழி படிவத்தில் கையெழுத்து போட்ட பின்னர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என்று கோழிக்கோடு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Degree cancel Dowry Kerala
Author
Kerala, First Published Sep 22, 2021, 7:09 PM IST

திருவனந்தபுரம்: திருமணத்தின் போது வரதட்சணை வாங்க மாட்டேன் என்று ப்ராமிஸ் செய்து உறுதி மொழி படிவத்தில் கையெழுத்து போட்ட பின்னர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என்று கோழிக்கோடு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Degree cancel Dowry Kerala

வரதட்சணை கொடுமையில் இருந்து பெண்களை காக்க என்ன சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அதனால் ஏற்படும் மரண ஓலங்கள் மட்டும் நிற்கவே இல்லை. இன்னமும் வரதட்ணை கொடுமை, அதன் வெளிப்பாடாக தற்கொலை என்ற சம்பவங்கள், வழக்காக காவல் நிலையங்களில் பதிவாகி கொண்டு தான் இருக்கின்றன.

இந் நிலையில், வரதட்சணை மரணங்களுக்கு முற்றுப்புள்ளி கேரள மாநிலம் ஒரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. மாநிலத்தின் பெரிய பல்கலைக்கழகமான கோழிக்கோடு பல்கலைக்கழகம் வரதட்சணை வாங்கினால் அவர்களின் பட்டம் ரத்து செய்யப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

Degree cancel Dowry Kerala

படிக்கும் போது வழங்கப்படும் சேர்க்கை விண்ணப்பத்துடன் மாணவர்களுக்கு ஒரு நிபந்தனையாக வைத்து கட்டாயம் ஆக்கி உள்ளது. அந்த படிவத்தில் மாணவர்கள் கையெழுத்திடும் பட்சத்தில் மாணவர்களுக்கு சேர்க்கையும், அதன் பின்னரும் பட்டமும் வழங்கப்படும். கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் இந்த அதிரடி உத்தரவு ஆளுநர் அனுமதி கிடைத்ததும் உடனடியாக நடைமுறைக்கு வரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios