மக்களவையில் Digital Personal Protection (DPDP) மசோதாவை மத்திய அரசு இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இது தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை உருவாக்க அரசு முன்னெடுத்த இரண்டாவது முயற்சியாகும்.

இந்த புதிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் அது பாதுகாக்கும் என்றும். அதேபோல பொருளாதாரத்தை விரிவுபடுத்தவும், தேசிய பாதுகாப்பு மற்றும் தொற்றுநோய்கள் மற்றும் பூகம்பங்கள் போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு சட்டபூர்வமான அணுகலை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று மின்னணு மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உலகளாவிய தரநிலைகளுடன் கூடிய இந்த DPDP மசோதா, தற்கால மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதே நேரத்தில் மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையானது என்றும் அமைச்சர் ராஜீவ் கூறினார். பல பங்குதாரர்களுடன் விரிவாக ஆலோசித்த பிறகு தான் இந்த மசோதா வரைவு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

மணிப்பூர் கலவரத்தை கையில் எடுத்து பாஜகவுக்கு பயம் காட்ட போகிறாரா கமல்! ஆர்ப்பாட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

மேலும் தரவு மீறல் வழக்கில் ஒரு சம்பவத்திற்கு ₹250 கோடி வரை அபராதம் விதிக்க இந்த மசோதா திட்டமிட்டுள்ளது என்றும், கடந்த 2022 நவம்பரில் வெளியிடப்பட்ட முந்தைய வரைவில் முன்மொழியப்பட்ட ₹500 கோடிக்கும் குறைவான தொகை இதென்பதும் குறிப்பிடத்தக்கது. சட்ட வல்லுநர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த மசோதாவின் நோக்கம் தானியங்கி மற்றும் இயந்திர டிஜிட்டல் தரவு செயலாக்கத்தை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

கடந்த 18 நவம்பர் 2022 அன்று வெளியிடப்பட்ட வரைவின் முந்தைய பதிப்பிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில், குழந்தைகளின் வயதைக் குறைக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கும் ஒரு விதியை இந்த மசோதா அறிமுகப்படுத்தியுள்ளது. வயது வரம்பு தற்போது 18 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காசிக்குப் போய் கங்கையில் நீராட விருப்பமா? ரயில்வே இயக்கும் சிறப்பு ரயிலில் போகலாம்! முழு விவரம்

வெள்ளைப் பட்டியலுக்குப் பதிலாக, தனிப்பட்ட தரவுகளின் எல்லைப் பரிமாற்றத்திற்கான எதிர்மறையான பட்டியல் அணுகுமுறையை வழங்குவது குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் ஏற்படுத்துகிறது. இந்த அணுகுமுறையின் அடிப்படையில், இந்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் எல்லைகளுக்குள் தனிப்பட்ட தரவு பரிமாற்றத்தை கட்டுப்படுத்தும் திறனை இந்திய அரசாங்கம் கொண்டிருக்கும்.

மேற்குறிய அத்தகைய அதிகாரம், ஒரு நிறுவனத்தால் தனிப்பட்ட தரவை மாற்றுவதற்கு, அதிக அளவு பாதுகாப்பை வழங்கும். எதிர்மறை பட்டியலுக்கான அளவுகோல்களை நிர்ணயிப்பதிலும், துறைசார் சட்டங்களுக்கும் மசோதாவுக்கும் இடையே இணக்கத்தை பேணுவதற்கும் இந்திய அரசு கடைபிடிக்கும் அணுகுமுறை மிக முக்கியமானதாக இருக்கும்” என்று கைதான் அண்ட் கோ நிறுவனத்தின் பார்ட்னர் சுப்ரதிம் சக்ரவர்த்தி கூறினார்.

தனிப்பட்ட தரவு சேகரிப்புக்கான ஒப்புதல், நிபந்தனையற்ற, தெளிவற்ற, மற்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்குத் தேவையான அளவிற்கு வரம்புக்குட்பட்டது உள்ளிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் இந்த மசோதா கட்டாயப்படுத்துகிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒப்புதல் பெறப்பட்டாலும், அத்தகைய குறிப்பிட்ட நோக்கத்திற்காக தனிப்பட்ட தரவை செயலாக்குவது அவசியமானால் மட்டுமே ஒப்புதல் செல்லுபடியாகும் என்றும் மசோதா கூறுகின்றது.

இந்த புதிய மசோதாவானது, ஒரு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்ட குறைகளைத் தீர்க்கும் செயல்முறையை முடித்த பின்னரே, இந்திய தரவுப் பாதுகாப்பு வாரியத்தை அணுகுவதற்கான விருப்பத்தைப் பெறும். தரவு பாதுகாப்பு மசோதாவில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடர்பான விதிகளும் உள்ளன. அங்கு தரவு பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் மேல்முறையீடுகளின் விசாரணையை TDSAT கையாளும்.

ஏசியாநெட் எடிட்டர் குறித்து அவதூறாகப் பதிவிட்ட வழக்கில் முன்னாள் மாஜிஸ்திரேட் எஸ். சுதீப் சரண்!