2026 புத்தாண்டை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் தனது செய்தியில் சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

2026-ம் புத்தாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு, நாட்டின் முக்கியத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், நாட்டு மக்களுக்கும் தங்களது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குடியரசுத் தலைவருடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு

இந்தியத் துணைத் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் (Rashtrapati Bhavan) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' (X) தளத்தில், "இன்று புது தில்லியில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜி அவர்களைச் சந்தித்து, எனது மனமார்ந்த 2026 புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தி

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அவரது வாழ்த்துச் செய்தியில், “புத்தாண்டு என்பது புதிய ஆற்றல் மற்றும் நேர்மறையான மாற்றத்தின் அடையாளம். இது நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கவும், புதிய லட்சியங்களை வகுக்கவும் ஒரு வாய்ப்பு. நாட்டின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் குடிமக்கள் தங்களது பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

"2026-ம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்," என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 2026-ம் ஆண்டு அனைவருக்கும் சிறந்த ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மக்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையவும், சமூகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவவும் தாம் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, புத்தாண்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், வெற்றியையும் கொண்டு வரட்டும் எனத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டம்

இந்தியா முழுவதும் 2026 புத்தாண்டு கோலாகலமாக வரவேற்கப்பட்டது. முக்கிய நகரங்கள், மலைப்பிரதேசங்கள் மற்றும் ஆன்மீக மையங்களில் மக்கள் திரண்டு வாணவேடிக்கைகள் மற்றும் சிறப்புப் பிரார்த்தனைகளுடன் புத்தாண்டைக் கொண்டாடினர்.