Asianet News TamilAsianet News Tamil

கோவேக்ஸின் தடுப்பூசி மூன்று பேருக்கு செலுத்தப்பட்டது... கொரோனாவை வெல்லும் பணியில் முன்னேறும் இந்தியா..!

இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனைகள் தொடங்கியுள்ளன.

Covaxing inject to human body in Hariyana
Author
Haryana, First Published Jul 18, 2020, 8:54 AM IST

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றை ஒழிக்க உலக நாடுகள் பலவும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து ‘கோவேக்ஸின்’ என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்தது. அடுத்தடுத்து சோதனை கட்டங்களைத் தாண்டி, அந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் அளவுக்கு வெற்றிகரமாக முன்னேறியது.

 Covaxing inject to human body in Hariyana
இந்நிலையில் கோவேக்ஸின் மருந்து மனிதர்களுக்கு செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. ஹரியானாவில் ரோடாக் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளன. அந்த மருத்துவமனையில் 3 பேருக்கு கோவேக்ஸின் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் மூவரும் முழுமையாக ஒத்துழைத்த்துள்ளனர். ஊசி செலுத்திய பிறகு மூவருக்கும் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று ஹரியானா சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Covaxing inject to human body in Hariyana
இந்த மருந்து மூவரின் உடலிலும் ஏற்படுத்தும் மாற்றங்களை மருத்துவர்களும் மருந்து ஆராய்ச்சியாளர்களும் கண்காணித்துவருகிறார்கள். இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்தால், மேலும் இரு கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும்.

Follow Us:
Download App:
  • android
  • ios