Asianet News TamilAsianet News Tamil

20 ஆயிரத்தை கடந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 20,557 பேருக்கு பாதிப்பு.. 44 பேர் பலி

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,557பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

Corona case today - 20,557 case positive last 24 hrs
Author
India, First Published Jul 28, 2022, 10:27 AM IST

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,557 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 14,830 ஆகவும் நேற்று18,313 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 20,557 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,59,321 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 18,313 பேருக்கு கொரோனா.. 41 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 19,216 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,32,86,787 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,46,323 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:தமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு… மக்கள் நிம்மதி பெருமூச்சு!!

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,26,211  ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.20 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.33 % ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.47 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 203.21 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 40,69,241 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios