Asianet News TamilAsianet News Tamil

உச்ச நீதிமன்றத்துக்கு போக முடியாது.. பதவியும் போச்சு.! என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி.?

2019 மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக கூறப்படும் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

chronology Rahul Gandhi disqualified from Lok Sabha  Whats the next step for Congress
Author
First Published Mar 25, 2023, 8:01 AM IST

கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயராக இருப்பது எப்படி" என்று பேசினார். 10,000 ஜாமீன் பத்திரத்தை செலுத்தி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து எம்.பி ராகுல் காந்தி ஜாமீன் பெற்றார். 

எம்.பி.யாக இருப்பதால், அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் அதிர்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. சட்டப்படி, எந்த உயர் நீதிமன்றமும் தண்டனையை ரத்து செய்யாவிட்டாலோ அல்லது தண்டனையின் அளவைக் குறைக்காவிட்டாலோ, ராகுல் காந்தி அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. நான்கு ஆண்டுகளாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Rahul Gandhi disqualified from Lok Sabha

Explained : அடுத்த பிளான்.!! ராகுல் காந்தியின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்.?

டாப் பாயிண்ட்ஸ் : 

* இந்த நடவடிக்கையால் அச்சுறுத்தப்படவோ அல்லது அமைதியாக இருக்கவோ முடியாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இதனை நாங்கள் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம். அதானிக்கு எதிராக பேசியதற்கு ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

* காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “பாஜக ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய எல்லா வழிகளிலும் முயற்சித்தார்கள். அவர்கள் உண்மையைப் பேசுபவர்களை வைத்திருக்க விரும்பவில்லை, ஆனால் நாங்கள் தொடர்ந்து உண்மையைப் பேசுவோம் என்று ட்வீட் செய்துள்ளார்.

* “நாங்கள் தொடர்ந்து அதானி விவகாரம் குறித்து விசாரணை கோரிக்கையை வைப்போம். ஜனநாயகத்தை காப்பாற்ற சிறை செல்வோம்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

* காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால், பாஜக அரசின் "ஜனநாயக விரோத, சர்வாதிகார அணுகுமுறையின் தெளிவான வழக்கு" என்று கூறினார்.

* காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராகுல் காந்திக்கு எதிராக மோடி அரசால் நடத்தப்படும் இந்த நடவடிக்கையை "பழிவாங்கும் அரசியல்" என்று கூறினார்.

* பாஜகவின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், “ராகுல் காந்தியை நாடாளுமன்ற இருக்கையில் இருந்து நீக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயத்தில் கொடுக்கப்பட்டுள்ள இருக்கையில் இருந்து அவரை நீக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

* ராகுல் காந்தி ட்விட்டரில், “நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன். இதற்காக எல்லா விலையையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

* மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோர், நேரு - காந்தி குடும்பத்திற்கு நிலப்பிரபுத்துவ மனப்பான்மை மற்றும் உரிமை உணர்வு இருப்பதாகக் கூறி, காந்தியை குற்றவாளியாக்கும் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்ததற்காக காங்கிரஸை சாடினார்கள்.

* ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, கேரளாவில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. சட்டப்படி, எந்த உயர் நீதிமன்றமும் தண்டனையை ரத்து செய்யாவிட்டாலோ அல்லது தண்டனையின் அளவைக் குறைக்காவிட்டாலோ, ராகுல் காந்தி அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

* எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவதூறு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைக்காவிட்டால், ராகுல் காந்தியும் ஒரு மாதத்திற்குள் டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்ய வேண்டியிருக்கும்.

* சட்ட நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஒரு கிரிமினல் வழக்கு என்பதால், ராகுல் காந்தி நேரடியாக உயர் நீதிமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ அணுக முடியாது. அவர் முதலில் குஜராத் செஷன்ஸ் கோர்ட்டிலும் பின்னர் குஜராத் உயர்நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

* இதற்கிடையில், மக்களவைத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தியை எதிர்த்து டெல்லி மற்றும் வயநாட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

எம்.பி பதவி காலி.. 8 ஆண்டுகள் வரை ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாதா? என்ன சொல்கிறது சட்டம்?

Follow Us:
Download App:
  • android
  • ios