ஆபாச இணையதளங்கள் முடக்க உத்தரவு...! மத்திய அரசு அதிரடி..!
பணம் ஒருபக்கம், பாலியல் உணர்வு ஒரு பக்கம் என தான் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம். தற்போது உள்ள காலக்கட்டத்தில் சிறு வயதினரே வயதிற்கு மீறி தெரித்துக்கொள்ள வேண்டிய அனைத்து விவரமும் தெரிந்துக்கொள்ளும் ஒரு தளமாக உலக அளவில் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பல ஆபாச இணையதளங்கள் இயங்கி வருகிறது.
அதிலும் குறிப்பாக குழந்தைகள் கொண்ட ஆபாச இணையதளங்கள் அதிகம் காணப்படுகிறது. இதனையும் வாய் பிளந்துக்கொண்டு பார்ப்பதற்கே பலர் இருகின்றனர்.
இந்நிலையில் குழந்தைகள் கொண்ட ஆபாச இணைய தளங்களை வரும்ஜூலை 31 ஆம் தேதிக்குள் முடக்க வேண்டும் என இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதாவது இது போன்ற இணையதளங்கள் பொதுவாகவே வெளிநாட்டிலிருந்து இயங்குகிறது. அவ்வாறு இயங்கும் இணைய தளங்கள் உட்பட சுமார் 1500 இணைய தளங்களை முடக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.