Asianet News TamilAsianet News Tamil

கருகி கருவாடான கார்கள்..! கோடி ரூபாய் கார்களின் அலங்கோல காட்சி..!

பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் எரிந்து கருகிய நிலையில் காட்சி அளிக்கின்றன
 

cars caught fire in bangalore
Author
Bangalore, First Published Feb 23, 2019, 7:56 PM IST

பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் எரிந்து கருகிய நிலையில் காட்சி அளிக்கின்றன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி அரங்கத்திற்கு வெளியே வாகன நிறுத்தத்தில் பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் இன்று மதியம் வெளியில் திடீயென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கிய தீயில் வாகனங்கள் எரிந்து நாசமாயின. 

cars caught fire in bangalore

இதனை தொடர்ந்து காவல் திரையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இதற்காக 10 கும் மேற்பட்ட டெண்டர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.மேலும் இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்ட மாதிரி தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்ட பின் தொடந்து ஒரு மணி நேரத்திற்கு விமானத்தை இயக்க வில்லை.

cars caught fire in bangalore

இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்டமாக, யாரோ ஒருவர் சிகரெட் பிடித்து வீசியதால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

cars caught fire in bangalore

மிகவும் கடினமாக போராடி தீயை அணைக்கப்பட்ட பிறகு கருகி கருவாடான கார்கள் எப்படி காட்சி அளிக்கிறது என்று நீங்களே பாருங்கள்....

Follow Us:
Download App:
  • android
  • ios