Asianet News TamilAsianet News Tamil

அரசு பேருந்து குட்டையில் கவிழ்ந்து விபத்து... 7 பேர் உயிரிழப்பு

அசாமில் குட்டையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து பார்பேட்டா நகரை நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது.

bus accident...7 people kills
Author
Assam, First Published Oct 21, 2018, 11:50 AM IST

அசாமில் குட்டையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து பார்பேட்டா நகரை நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. bus accident...7 people kills

நேற்று மாலை நல்பாரி மாவட்டத்தின் வழியாக சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோரத்தில் உள்ள குட்டைக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். bus accident...7 people kills

விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிலரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios